ARTICLE AD BOX
டி ராஜேந்திரன் தான் எனக்கு கடவுள்.. வேற யாரும் அந்த உதவி செய்யல! நடிகர் ராதாரவி எமோஷனல்
சென்னை: எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதற்கு கச்சிதமாக பொருத்தமாகும் நடிகர் என்றால் ராதா ரவி என்று சொல்லும் அளவிற்கு பல வருடங்களாக அண்ணன், தம்பி, காமெடி கேரக்டர், வில்லன் என்று எல்லா கேரக்டரிலும் நடித்து கலக்கிக் கொண்டிருக்கிறார். ராதாரவி பேட்டி ஒன்றில், சினிமாவில் ஆரம்பத்தில் வரும்போது தனக்காக யாரும் செய்யாத உதவியை டி ராஜேந்திரன் தான் செய்தார். அவர் தான் எனக்கு கடவுள் என்று நெகிழ்ந்து பேசி இருக்கிறார்.
சினிமா துறையில் இருக்கும் ஒரு சிலர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அதுபோல தங்கள் மனதில் நினைப்பதே அப்படியே பேசி விடுவார்கள். அதனால் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டிருப்பார்கள் அதில் ஒருவர் தான் ராதாரவி. ராதாரவி நடிகர் எம் ஆர் ராதாவின் மகன், ராதிகா, நிரோஷாவின் சகோதரர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அப்பா மாதிரியே பல இடங்களில் நக்கல் நையாண்டி கலாய்ப்புகளில் கில்லியாக பேசிக் கொண்டிருப்பார்.

அப்பாவைப் போல பிள்ளை
அவருக்கும் அவருடைய அப்பாவிற்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும் ரியல் லைப்பில் இருவரும் வெவ்வேறு சிந்தனை கொண்டவர்கள் என்று பல இடங்களில் ராதாரவி பேசி இருக்கிறார். ராதாரவிக்கும் தன்னுடைய அப்பா போல நாடகத்துறை தான் ஆரம்பம். சின்ன வயசிலிருந்து நிறைய நாடகங்களில் நடித்திருந்தாலும் அதைத்தான் இப்போது வரைக்கும் சினிமாவில் பயன்படுத்தி கொண்டு வருவதாக ராதா ரவி பேசியிருக்கிறார்.
முதல் அறிமுகம்
அதுபோல ராதாரவியை சினிமாவில் அறிமுகப்படுத்தியது கே பாலச்சந்தர் தான். அவரை ரெகமெண்ட் செய்தது கமல்ஹாசன். 1976 ஆம் ஆண்டு வெளிவந்த மன்மத லீலை என்ற படத்தில் சின்ன ரோலில் அந்த படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் ஒரு ரகடு பாயாக புல்லட்டில் காதலியோடு சுற்றிக் கொண்டிருப்பார். அந்த படத்தில் அவருக்கு பெரிய அளவில் அவருக்குமுக்கியத்துவம் இல்லை என்றாலும் அதற்கு பிறகு வெளியான வைதேகி காத்திருந்தால் படத்தில் யார் இவர் என்று எல்லோரையும் வியக்க வைக்கும் வகையில் அதிரடி காட்டி இருந்தார்.
வெள்ளிக்கிழமை ராமசாமி
அதிலும் வெள்ளிக்கிழமை ராமசாமினு அவருடைய அறிமுகம் காட்சியே பெரிய அளவில் மிரட்டலாக இருக்கும். மாமுல் வாங்கும் ரவுடியாக இருந்தாலும் பாசக்கார அண்ணனாகவும் நடித்திருப்பார். அதற்கு பிறகு ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய தனித்துவத்தையும், பாடி லாங்குவேஜ்யும் வித்தியாசமாக காட்டிக் கொண்டிருக்கும் ராதா ரவி முன்னணி நடிகர்கள் எல்லோரோடும் சேர்ந்து நடித்து விட்டார்.
கடைசி வரை நடிப்பு
ரஜினி தொடங்கி இப்போதுள்ள நடிகர்களோடும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். தான் சாகுற வரைக்கும் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று பேட்டிகளில் பேசியிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து உருக்கமாக பேசி இருக்கிறார்.

ராதாரவி வருத்தம்
அதில், நான் எம்ஆர் ராதா மகன் என்றதும் எனக்கு யாரும் வந்ததும் வாய்ப்பு தந்து விடல. ஆரம்பத்தில் சின்ன சின்ன காட்சிகள், அரை மணி நேரம் ஒரு மணி நேரம் நடிக்க வேண்டிய காட்சிகள் என்று ஒரு சீன் ரெண்டு சீன் நடித்து ரொம்ப கஷ்டப்பட்டேன். அந்த நேரத்தில் தான் எனக்கு கடவுள் மாதிரி டி ராஜேந்தர் வந்தாரு. அவர்தான் என்னை வெளியே கொண்டு வந்தார்.
டி ராஜேந்திரன் செய்த உதவி
நெகட்டிவ் சைடுனாலும் சரி, பாஸிட்டிவ் சைடு எதுவா இருந்தாலும் அவர்தான் என்னை வெளியே கொண்டு வந்தார் என்று சொல்லுவேன். உயிர் உள்ளவரை உஷா படத்தில் வில்லன் கேரக்டரை கொடுத்து என்னை சினிமாவில் மேலே தூக்கி விட்டது டி ராஜேந்திரன் தான். சினிமா துறையில் எத்தனையோ இயக்குனர்களை பார்த்திருந்தாலும் டி ராஜேந்திரன் போல ஒரு மனிதனை பார்க்க முடியாது. அவர் வித்தியாசமான நபர் என்று உருக்கமாக ராதாரவி பேசியிருக்கிறார்.
- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவருக்கு பதில் இவர்.. அதிரடியாக மாறிய கதை! செம சர்ப்ரைஸ் இருக்கு!
- வடிவேலு கூட இனி நடிக்கவே மாட்டேன்! பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை.. அந்த படத்திற்கு பிறகு! சோனா பதில்
- முன்னூறு நோயை நொறுக்கும் முருங்கை.. ஆணின் இயற்கையான தங்க பஸ்பம் முருங்கை பிசின்.. அற்புத சத்துக்கள்
- பத்திரம் இப்போ பிரபு கையில்.. "சின்னபசங்க விளைச்சல் வீடு வந்து சேராது" அப்பவே சொன்ன சிவாஜி: பிரபலம்
- ஆசைப்பட்டு கிடைச்சது! கண்ணு முன்னாடியே போயிடுச்சு! இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல! மணிமேகலை எமோஷனல்
- சுட சுட ரெடி.. தமிழ்நாடு பட்ஜெட்டில் காத்திருக்கும் அந்த 3 சர்ப்ரைஸ்.. தங்கம் தரப்போகும் ட்விஸ்ட்
- சிறகடிக்க ஆசை: சூழ்ச்சியில் சிக்கும் மீனா.. காப்பாற்ற வரும் சிந்தாமணியின் கணவர்.. எதிர்பாராத திருப்பம்
- எப்போ சொன்னோம்.. வரியை குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதாக டிரம்ப் சொன்னதற்கு மத்திய அரசு ரியாக்ஷன்
- முகத்தை கூட காட்ட மாட்டீங்களா.. இப்போ பாருங்க.. எடப்பாடியை பழிவாங்கிய செங்கோட்டையன்.. என்ன நடந்தது?
- ரூ.2 இட்லிக்கு தவிக்கும் அபிநய்.. கல்லீரல் நோயின் பிடியில்.. சக்ஸஸ் நடிகர் தனுஷ் உதவுவாரா? பிரபலம்
- தேனியில் தங்க நகை அடகு கடை நடத்தும் பெண் குடும்பம்.. குழந்தையின் சின்ன தவறால் ரூ.24 லட்சம் காலி
- தமிழரை மணந்து திருச்சியில் சந்தோஷமாக வாழ்ந்த இலங்கை பெண்.. தம்பியால் வந்த வில்லங்கம்.. வாக்குமூலம்
- திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் திருதிரு 5 பெண்கள்.. கையில் ரூ.50 ஆதார் அட்டை.. யாருனு போய் பார்த்தால்?
- பாக்கியலட்சுமியில் இனியா- ஆகாஷ் காதல் கதை வந்தது இதற்காக தான்.. அவ்ளோ கஷ்டம் இருக்கு! செல்வி ஓபன்
- Karadaiyan nonbu 2025: காரடையான் நோன்பு எப்போது? தாலி சரடு மாற்ற உகந்த நேரம் எது?