டபிள்யூபிஎல்: த்ரில்லர் வெற்றி பெற உதவிய 16 வயது தமிழக வீராங்கனை..!

3 days ago
ARTICLE AD BOX

மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபியை மும்பை அணி கடைசி ஓவரில் வீழ்த்தி அசத்தியது.

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 7-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக, நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் சோ்த்தது.

பெங்களூரு பேட்டா்களில் அதிகபட்சமாக எலிஸ் பெரி 43 பந்துகளில் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 81 ரன்கள் விளாசினாா்.

அடுத்து விளையாடிய மும்பை அணி 19.5 ஓவரில் 170/6 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

மும்பை அணியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 50 ரன்கள், அமன்ஜோத் கௌர் 34 ரன்கள் எடுத்தார்கள்.

கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவையான போது கமலினி முதல் பந்தை டாட் ஆக்கவும் 2ஆவது பந்தில் 2 ரன்களும் 3ஆவது பந்தில் 1 ரன்னும் எடுத்தார்.

4ஆவது பந்தில் அமன்ஜோத் கௌர் 1 ரன் எடுக்க 2 பந்தில் 2 ரன்கள் தேவையாக இருந்த போது 5ஆவது பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை தன் வசமாக்கினார்.

கமலினி, அமன்ஜோத் கௌர்

இந்த வெற்றியுடன் மும்பை அணி ஆர்சிபியை 6 போட்டிகளில் 4இல் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது கமலினிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

A superb chase as Mumbai Indians secure their 2️⃣nd win in a row!

The Harmanpreet Kaur-led unit bag 2️⃣ points as they beat #RCB by 4 wickets!

Scorecard ▶ https://t.co/WIQXj6JCt2 #TATAWPL | #RCBvMI | @mipaltan pic.twitter.com/NfA75uQzK3

— Women's Premier League (WPL) (@wplt20) February 21, 2025
Read Entire Article