ARTICLE AD BOX
ஞானசேகரன் மீதான குண்டர் சட்டம்.. போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் தாக்கல் செய்த மனு குறித்து 4 வாரங்களில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஞானசேகரனின் தாய் கங்காதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், தனது மகன் ஞானசேகரனை கடந்த டிசம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொடர்பான வழக்கில் காவல்துறையினர் கைது செய்ததாகவும் அதன் பிறகு ஜனவரி 5ஆம் தேதி தனது மகன் ஞானசேகரன் மீது சென்னை மாநகர காவல் துறை ஆணையர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

தனது மகன் மீதான பாலியல் வழக்கு 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ள நேரத்தில் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பழைய வழக்குகளை காரணம் காட்டி காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்துள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க கூடிய எந்த விதிமுறைகளையும் மாநகர காவல் துறையினர் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக தனது மகன் மீது வேண்டும் என்றே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
எனவே சட்ட விரோத காவலில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை விடுவிப்பதுடன் தனது மகன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து நான்கு வாரங்களில் காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
- திருச்சி அரசு மருத்துவமனையில்.. நர்சிங் மாணவியிடம் வரம்பு மீறிய போலீஸ்காரர்.. போக்சோவில் கைது!
- திருப்பூர் நிர்மலாவிற்கு இன்னும் 2 நாளில் திருமணம்... அதற்குள் இப்படியா ஆகணும்.. திரண்ட மக்கள்
- ரத்த வாடை போகலை..குப்பை தொட்டியில் குவா குவா சத்தம்! அம்மா, பாட்டியின் அபாண்ட வேலை! சில்லிட்ட சென்னை
- 120 பவுன் தங்க நகைகள்.. ஞானசேகரனிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கிய நகை வியாபாரி கைது.. என்னாச்சு
- புட்டுப் புட்டு வைத்த விஜயலட்சுமி.. மேட்டர் சீரியஸ்! வளசரவாக்கம் வெயிட்டிங்.. சீமான் திடீர் முடிவு!
- ஆஹா.. சீமான் வழக்கு ரொம்ப சீரியசாகுதே.. 5 மணி நேரம் விஜயலட்சுமியிடம் விசாரித்த போலீஸ்
- கணவன் கண்முன் பெண்ணின் ஆடையை கழற்றி.. போலீஸ் ஸ்டேஷனில் ’விடுதலை’ சம்பவம்! போலீசாருக்கு சிறை தண்டனை!
- சென்னையில் பட்டப்பகலில் போலீஸ்காரர்கள் இடையே சண்டை.. ஒருவருக்கு மாவுக்கட்டு! அதிர்ந்த மக்கள்
- தனியா இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞரை காலில் சுட்டு பிடித்த போலீஸ்! மற்றொருவருக்கு மாவுக்கட்டு
- Gold Rate Today: ஆறுதல் கொடுத்த தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன?