<p>முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று அவரது உருவ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.</p>
<p>பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜெயலலிதா இல்லாவிட்டாலும் அவரது நினைவு அனைவரது மனதிலும் நிலைத்து நிற்கும். இதற்கு முன்பு மூன்று முறை வேதா இல்லத்திற்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்தித்துள்ளேன். ஜெயலலிதா நாமம் வாழ்க” எனத் தெரிவித்தார்.</p>
<p>ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். </p>
<p>கடந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட செங்கோட்டையன் இந்த முறை ஈரோடு பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதேபொல் தங்கமணியும் நாமக்கல் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் கல்ந்து கொண்டார். </p>
<p>இதேபோல் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். </p>
<p> </p>