ARTICLE AD BOX
சரஜெவோ: தன்னாட்சிபெற்ற செர்பிய குடியரசின் அதிபர் மிலொராட்டுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து போஸ்னியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பால்கன் நாட்டில் அமைதியை மேற்பார்வையிடும் உயர்மட்ட சர்வதேச தூதருக்கு போஸ்னிய செர்பிய அதிபர் மிலொராட் டோடிக் கீழ்படியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த ஒரு ஆண்டுகாலமாக நடந்த இந்த விசாரணையில் நேற்று அதிபர் மிலொராட்டுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து சரஜெவோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 6 ஆண்டுகள் பதவியில் இருப்பதற்கும் மிலொராட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நீதிமன்றத்தின் எந்த தண்டனைக்கும் தான் கீழ்படிய மாட்டேன் என்று டோடிக் கூறியுள்ளார்.
The post செர்பிய அதிபருக்கு ஒரு ஆண்டு சிறை appeared first on Dinakaran.