ARTICLE AD BOX
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாட்ஸ் ஆப் (Bot) மூலமாக மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாட்ஸ்ஆப் சாட்பாட் மூலம் வாட்ஸ்ஆப் ஆன்லைன் டிக்கெட்டுகள் பெறும் சேவை தற்காலிகமாக வேலை செய்யவில்லை.
எனவே, அனைத்து பயணிகளும் சிஎம்ஆர்எல் மொபைல் செயலி, மொபைல் க்யூஆர், சிங்காரா சென்னை அட்டை, சிஎம்ஆர்எல் பயண அட்டைகள் போன்ற பிற ஆன்லைன் முறைகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இண்டியன்வெல்ஸ்: அல்கராஸ், மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி!
மேலும் தகவல் வரும் வரை பயணிகள் மெட்ரோ ரயில் நிலைய கவுண்டரிலும் டிக்கெட்டுகளைப் பெறலாம். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருந்துகிறது. மேலும் தகவல்கள் விரைவில் புதுப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது.