ARTICLE AD BOX
சென்னை கே.கே.நகரில் எரிந்த நிலையில் ஐடி ஊழியர் சடலம்! திருவண்ணாமலை இளைஞருக்கு என்ன ஆனது?
சென்னை: சென்னையில் ஐடி ஊழியர் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா, அவருக்கு என்ன நிகழ்ந்தது என்பது குறித்து கே.கே. நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் நேதாஜி (34). இவர் ஐடி ஊழியர், கே.கே.நகரில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் அவரது வீட்டில் இருந்து அளவுக்கு அதிகமான புகை வந்தது.

இதை அவருடைய அக்கம்பக்கத்து வீட்டினர் பார்த்து அதிர்ச்சியடைந்து கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த போலீஸார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு எரிந்த நிலையில் ஐடி ஊழியர் சடலமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேதாஜியின் மரணம் தற்கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- What bro It's very wrong Bro..! டிடிஎஃப் வாசனுக்கு ஆப்பு வைத்த போலீஸ்.. இனி ஒரு பைசா கூட கிடைக்காது!
- கர்நாடகாவில் இஸ்ரேல் சுற்றுலா பயணிக்கு நேர்ந்த கொடூரம்.. நள்ளிரவில் கூட்டு பலாத்காரம்! திக்திக்
- நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்திய அணி.. ஜனாதிபதி, மோடி, ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து
- தொடையில் 14 கிலோ தங்கம் கடத்திய 'கடத்தல் ராணி' தமிழ் நடிகை ரன்யா ராவ் மீது சிபிஐ வழக்கு பாய்ந்தது!
- நீயில்லாம எப்படிடா வாழ்வேன்.. பேரனின் உடலுக்கு வைத்த தீயில் பாய்ந்து உயிரை விட்ட பாச தாத்தா.. சோகம்
- கடலூர்: குளிர்பானத்தில் மனைவி விஷம் கலந்த புகாரில் திடீர் திருப்பம்- கணவரின் பகீர் நாடகம் அம்பலம்!
- இந்தியா vs நியூசிலாந்து.. கடற்கரைகளில் சாம்பியன்ஸ் டிராபி பைனல் "லைவ்".. சென்னை ரசிகர்கள் ஹேப்பி!
- சூடுபிடிக்கும் அரசியல் சூழல்.. பட்ஜெட் கூட்டத்தொடர் 2ம் அமர்வு.. இரு அவைகளும் இன்று கூடுகின்றன