ARTICLE AD BOX
கடந்த 9 மாதங்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோரையும் பூமிக்கு அழைத்து வர ஃபால்கான் 9 டிராகன் விண்கலம்.
கடந்த 9 மாதங்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோரையும் பூமிக்கு அழைத்துவருவதற்காக விண்ணில் செலுத்தப்படவிருந்த ஸ்போஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ராக்கெட்டில், முக்கிய பாகத்தின் செயல்பாடு குறித்து சந்தேகம் எழுந்ததால் அந்தத் திட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
கோளாறு சரிசெய்யப்பட்ட பின் வெள்ளிக்கிழமைக்கு (மாா்ச் 14) பிறகுதான் அந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டாா்லைனா் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மே விண்வெளி நிலையத்தை கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி அடைந்தது.
இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்
பத்து நாள்களுக்குப் பிறகு ஸ்டாா்லைனா் மூலமே அவா்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. இருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை.
இதன் காரணமாக, அவா்கள் இருவரும் கடந்த 9 மாதங்களாக சா்வதேச விண்வெளி நிலையத்திலேயே சிக்கியுள்ளனா்.
இந்த நிலையில், ஸ்போஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ராக்கெட்டின் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதை அடுத்து சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்துவருவதற்கான ஏற்பாடுகள் நடந்தது.
இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 4.33 மணிக்கு ஃபால்கன் 9 வாயிலாக டிராகன் விண்கலம் செலுத்தப்பட்டது.
சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்துவர புறப்பட்ட ஃபால்கான் 9 டிராகன் விண்கலத்தில் அமெரிக்க, ஜப்பான், ரஷியாவைச் சேர்ந்த 4 விஞ்ஞானிகள் புறப்பட்டுள்ளனர்.