ARTICLE AD BOX
டெல்லி: சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.58 கோடி பரிசு வழங்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. இந்தத் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்றது. குரூப் சுற்றில் ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்து அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியையும், இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியையும் வீழ்த்தி 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றியது.
அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ. ரூ.58 கோடி பரிசுதொகை அறிவித்துள்ளது. இது இந்த தொடரில் இடம்பெற்றிருந்த வீரர்கள்,பயிற்சியாளர்கள், ஊழியர்கள் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்களை கவுரவிக்கும் விதமாக வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து பிசிசிஐ செயலாளர் சைக்யா, “இந்த அளவுக்கு இந்திய அணியின் செல்வாக்கிற்கு காரணம் அவர்களது கடின உழைப்பு, திறமையான வெளிப்பாடு. இந்த வெற்றி இந்தியாவின் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் உயர் தரத்தில் இருப்பதை உறுதி செய்துள்ளது. அடுத்த ஆண்டுகளிலும் இதை இந்திய அணி தொடரும் என்பதை உறுதியளிக்கிறேன் என்ற் தெரிவித்தார்.
The post சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.58 கோடி பரிசு: பி.சி.சி.ஐ.அறிவிப்பு appeared first on Dinakaran.