சாக்கு, சணல் தட்டுப்பாட்டால் கொள்முதல் நிலையங்களில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்

2 hours ago
ARTICLE AD BOX

*நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

தரங்கம்பாடி : தரங்கம்பாடி பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு மற்றும் சணல் தட்டுபாட்டால் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. விரைந்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தரங்கம்பாடி பகுதியில் ஒழுகைமங்கலம், சங்கரன்பந்தல், திருவிளையாட்டம், தில்லையாடி, திருக்கடையூர், உள்ளிட்ட பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

விவசாயிகள் சம்பா தாளடி அறுவடை செய்த நெல் மூட்டைகளை இங்கு கொண்டு விற்பனைக்கு வைத்துள்ளனர். கொள்முதல் நிலையங்களில் சாக்கு மற்றும் சணல் தட்டுபாடு காரணமாக நெல் மூட்டைகள் எடை போட முடியாமல் குவித்து வைக்கபட்டுள்ளன.

சம்மந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக சாக்கு மற்றும் சணலுக்கு ஏற்பாடு செய்து குவிந்து கிடக்கும் நெல்களை மூட்டையில் கொட்டி எடை போட்டு எடுத்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

சாக்கு சணல் தட்டுபாட்டால் விவசாயிகளின் நெல்களை வாங்குவதிலும் தாமதம் ஏற்பட்டு அவர்களுக்கு பணம் கிடைப்பதிலும் தாமதம் உண்டாகிறது. இதனால் விவசாயிகள் கஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாக்கு, சணல் தட்டுப்பாட்டால் கொள்முதல் நிலையங்களில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article