ARTICLE AD BOX
Published : 05 Mar 2025 06:37 AM
Last Updated : 05 Mar 2025 06:37 AM
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி மார்ச் 16-ல் நாம் தமிழர் கட்சி பேரணி

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக்கோரி வரும் மார்ச் 16-ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் பேரணி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி, உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்.
பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வரும் மார்ச் 16-ம் தேதி மாலை 4 மணிக்கு திருப்போரூரில் நடைபெறவுள்ளது.
திருப்போரூர் அம்பேத்கர் சிலை அருகே தொடங்கும் இந்த பேரணியை நாம் தமிழர் கட்சியுடன் கொங்கு மக்கள் முன்னணி, தமிழ்நாடு நாடார் சங்கம், இந்திய தேசிய லீக் கட்சி, புரட்சித் தமிழகம் - பறையர் பேரவை, சிறுபான்மை மக்கள் நலக்கட்சி, தமிழர் மீட்புக்களம், தமிழர் தேசம் கட்சி ஆகியவற்றின் தலைவர்களும் பங்கேற்று நடத்தவுள்ளனர். நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்தலைமை வகிக்கவுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை