ARTICLE AD BOX
சருமத்தை பளபளப்பாக்கும் ஜூஸ்..!
இந்த நவீன காலகட்டத்தில் பெண்கள் அனைவரும் சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள பலவிதமான கிரீம்களை பயன்படுத்தி வருகின்றனர். அதுவும் விளம்பர படங்களில் தெரிவிக்கப்படும் செயற்கையான கிரீம்களை பயன்படுத்துவதில் பெண்கள் அதிக அளவு ஆர்வம் காட்டுகின்றனர். சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள நினைப்பது சரிதான். சருமம் வறட்சியாக இருப்பதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறையும் ஒரு காரணமாக இருக்கலாம். எனவே சருமம் பளபளப்பாக காணப்பட அதிக அளவு பழங்களை உட்கொள்ள வேண்டும். இந்த நிலையில் சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள இந்த ஜூஸ் குடித்தால் மட்டும் போதும் . அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆப்பிள் கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால், நம் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, நுரையீரல், சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் ஆக்குகிறது. வைட்டமின், இரும்புச்சத்து போன்ற பல சத்துக்களை கொண்டுள்ளது. இதனை வாரத்திற்கு மூன்று முறை குடிப்பது நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.
(ஜூஸில் 5-6 புதினா இலைகள் சேர்த்துக் கொள்ளுங்கள்.)