ARTICLE AD BOX
சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி: மேஷம் ராசிக்கு நல்லதா?.. கெட்டதா?.. முழு விவரம் இதோ
2025 பெயர்ச்சி பலன்கள்: 2025 ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடம். இந்த வருடத்தில் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி அடுத்தடுத்து நிகழ இருக்கின்றன. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த மூன்று பெயர்ச்சிகளும் நடைபெறள்ளன. இது மேஷம் ராசிக்கு தரும் பொதுவான பலன்களை இந்த தொகுப்பில் காணலாம்.
குரு பகவான் வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். ராகு - கேது ஒன்றரை வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார்கள். சனி பகவான் சராசரியாக 2.25 வருடத்தில் இருந்து மூன்று வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். இந்த 2025 வருடத்தில் இந்த நான்கு கிரகங்களும் பெயர்ச்சி ஆகவுள்ளன.

மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதைத் தொடர்ந்து மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இது மேஷம் ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை காணலாம்.
மேஷம்: மேஷ ராசிக்கு நன்மை - தீமை இரண்டும் சரி சமமாக இருக்கும். மேஷத்துக்கு ஏழரை சனி தொடங்கவுள்ளது. ஆனால் அதன் தாக்கம் குறையும் விதமாக 11 ஆம் இடத்துக்கு ராகு பெயர்ச்சி ஆகவுள்ளார். அதனால் ஏழரை சனியை நினைத்து பெரிதாக பயப்பட வேண்டியதில்லை.பொதுவாக மேஷத்தில் சூரியன் உச்சமாக இருக்கும். எப்பேற்றபட்ட பிரச்னையையும் உங்கள் ஆளுமையால் சமாளிக்கும் பக்குவம் உங்களிடம் உள்ளது.
நீண்ட காலமாக திட்டமிட்ட வெளியூர், வெளிநாடு பயண முயற்சிகள் சாத்தியமாகும். அந்தப் பயணங்களால் நல்ல ஆதாயம் உண்டு. குழந்தை பாக்கியம் இல்லாமல் வேதனைப்படுபவர்களுக்கு இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் உண்டாகும். குழந்தை பாக்கியத்துக்கான மருத்துவ சிகிச்சையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
ஏழரை சனியில் நிறைய விரங்கள் இருக்கத்தான் செய்யும். இருப்பினும் அந்த விரயங்களை ஈடுகட்டுமளவுக்கு ராகு வருமானத்தை கொடுத்துவிடுவார். நீண்ட காலமாக பூர்விக சொத்துகளை விற்பனை செய்வதில் இருந்த தடை நீங்கும். சொத்துகளை விற்று ஆதாயமடைவீர்கள். வெளிநாடு, வெளி மாநிலங்களில் உயர்கல்வி படிப்பதற்கான முயற்சிகள் நிறைவேறும்.
கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக இருந்த திருமண தடைகள் விலகி, இந்த காலத்தில் திருமணம் நடைபெறும். சுபசெலவுகள் நிச்சயம் உண்டு. தந்தை உறவில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
கவனமாக இருக்க வேண்டிய இடங்கள்:
செலவுகள் அதிகமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கடன் வாங்குவதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சனி 12 ஆம் இடத்தில் இருந்து இரண்டாம் வீட்டை பார்ப்பதால் செலவு அதிகரித்து, வருவாய் குறையும் நிலை இருக்கும். எனவே கடன் சுமை அதிகரிக்கும்.
நிதானம் தேவை
எதிலும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். தொழிலில் முதலீடு சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். காரியங்களில் கால தாமதம் இருக்கும். உடல்நலத்தில் அவ்வபோது சில பிரச்னைகள் வந்து செல்லும். ஆரோக்கியத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
- பிந்துகோஷ் கடைசி நொடிகள்.. பங்களா, 10 நாய், கார்.. அப்படி வாழ்ந்தாங்களே பிந்து கோஷ்.. பெஸ்ட் டான்சர்
- இறங்கியடித்த நம் உளவுத்துறை.. வங்கதேச ராணுவ தளபதியை முடிக்க நினைத்த பாகிஸ்தானுக்கு விழுந்த அடி- மாஸ்
- நீரும் நெருப்பும் சேர்ந்துடுச்சோ? சட்டசபையில் எடப்பாடிக்கு ஆதரவாக சீறிய ஓபிஎஸ்.. ஸ்டன் ஆன அதிமுக
- ரேஷனில் பாமாயில் வாங்கிட்டீங்களா? பாமாயிலை யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது தெரியுமா?
- 3 கிலோ தங்க நகை அணிந்து.. திருவண்ணாமலை கோவிலுக்கு வந்த தொழிலதிபர்.. பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்
- வேலூர் ஏலகிரி ரிசார்ட்டுக்கு வந்த கள்ளக்காதல் ஜோடி.. அதென்ன கையில்? அடடா, காமாட்சிக்கு என்னாச்சு
- உதயம் தியேட்டரை தொடர்ந்து.. அடுத்த ஷாக்.. சென்னையில் மூடப்படும் இன்னொரு பிரபல தியேட்டர்.. எங்கே?
- தொட்டு தொட்டு நடிக்காதே.. அத்தனை நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடிகைக்கு இப்படியொரு நிலைமை: பிரபலம்
- ரூ.4 கோடி சொத்து.. கடன் வாங்கி ரோட்டுக்கு வந்த நீலிமா ராணி.. மாணவிகளுக்கு பிரபல நடிகை தந்த அட்வைஸ்
- அமெரிக்காவை விடுங்க.. சீனாவுக்கு ரஷ்யா வைத்த பெரிய ஆப்பு.. புதின் உத்தரவால் கதறும் ஜி ஜின்பிங்
- எம்எல்ஏ பதவியே பறிபோயிடும்.. சட்டசபைக்கு வெளியே அந்த 5 நிமிடம்.. செங்கோட்டையன் மனம் மாறியது எப்படி?
- சொத்து பத்திரங்கள்.. நிலம் வாங்கியுள்ளோருக்கு மகிழ்ச்சி அறிவிப்பு.. பத்திரப்பதிவு கூடுதல் டோக்கன்கள்