ARTICLE AD BOX
கோவை மக்களே தண்ணீரை சிக்கனமா பயன்படுத்துங்க.. மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு
கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகிக்கும் பில்லூர் 1 மற்றும் 2 ஆகிய குடிநீர்த் திட்டத்தில் குழாய்களில் பிப்ரவரி 24, 25 ஆகிய இரண்டு நாள்களுக்கு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், சில பகுதிகளில் குடிநீர் விநியோக நாட்களில் இடைவெளி அதிகமாகும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்கள் தொகை அதிகமிருக்கும் மாநகராட்சிகளில் கோவை மாநகராட்சியும் ஒன்றாகும். கோவை மாவட்டத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளிமாநிலங்களைச் சேர்ந்த மக்கள் என லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக கேரள மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுவாணி அமை, மேட்டுப்பாளையத்தை அடுத்த பில்லூர் அணை மற்றும் பொள்ளாச்சி ஆழியாறு அணை ஆகியவை உள்ளன.

கோவை மாநகராட்சியைப் பொருத்தவரை சிறுவாணி, பில்லூர் 1, 2, 3 ஆகிய திட்டங்கள், வடவள்ளி - கவுண்டம்பாளையம் மற்றும் ஆழியாறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளான பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஆழியாறு அணையின் நீர் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.
சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியாறு அணையின் குடிநீர்த் திட்டங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு மேற்கொள்வது வழக்கம். அந்த சமயங்களில், பராமரிப்பு பணி மேற்கொள்ளும் பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் தண்ணீர் விநியோகம் தடை செய்யப்படும்.
அந்த வகையில், பில்லூர் 1 மற்றும் 2 ஆகிய குடிநீர்த் திட்டத்தில் குழாய்களில் பிப்ரவரி 24, 25 ஆகிய இரண்டு நாள்களுக்கு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் குடிநீர் விநியோக நாட்களில் இடைவெளி அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து, கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் வழங்கும் பில்லூர் I மற்றும் II குடிநீர் திட்டத்தில் குடிநீர் சேகரித்து கொண்டுவரும் பிரதான குழாய்களில் கட்டன் மலை என்ற இடத்தில் பராமரிப்பு பணிகள் 24.022025 முதல் 25.02.2025 ஆகிய இரண்டு நாட்கள் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனால், பில்லூர் பில்லூர் I மற்றும் II குடிநீர் திட்டத்தில் குடிநீர் சேகரிப்பு இருக்காது என்பதால், இத்திட்டங்களின் மூலம் குடிநீர் விநியோகம் பெறும் பகுதிகளான சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, கணபதி மாநகர், காந்திமா நகர், சங்கலூர் ரோடு கணபதி, ஆவாரம்பாளையம், பீளமேடு, சவுரிபாளையம், காந்திபுரம், வ உ சி பூங்கா, சித்தாபுதூர், ராமநாதபுரம், டவுன்ஹால், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், விளாங்குறிச்சி மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோக நாட்களின் இடைவெளி அதிகமாகும் என்பதை தெரிவிக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் மற்ற குடிநீர் ஆதாரங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Myv3 ads நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா?.. கோவை மாநகர போலீஸின் முக்கிய அறிவிப்பு
- கோவையில் சொந்த வீடு வச்சிருக்கீங்களா?.. மாநகராட்சியின் அசத்தல் அறிவிப்பு.. நோட் பண்ணுங்க
- டாப் கியருக்கு போகும் கோவை.. சரவணம்பட்டி இனி மொத்தமாக மாற போகுது.. இது நடந்தால் அசுர வளர்ச்சி தான்
- கோவையில் அதிர்ச்சி.. நடந்து சென்ற பெண்ணிடம் இளைஞர் செய்த அசிங்கம்.. கூச்சலிட்டதும் பைக்கில் எஸ்கேப்
- கோவை மக்களுக்கு குஷிதான்.. பிரமாண்டமாக புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு!
- மயானத்திலும் தீண்டாமை.. கோவையில் அநீதி! மாவட்ட ஆட்சியருக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
- முயல் ரத்தத்தில் ஹேர் ஆயில் தயாரிக்கலாமா? கோவையில் திடீர் ரெய்டால் பரபரப்பு
- 10 ஆண்டுகள் புறம்போக்கு நிலத்தில் வசித்தால் பட்டா.. முதல்வரின் மேஜர் முடிவு.. அமுதா ஐஏஎஸ் தகவல்
- அமெரிக்க இந்தியர்களுக்கு மட்டுமல்ல.. இந்தியாவில் உள்ளவர்களின் வேலைகளுக்கும்.. ஆப்பு வைத்த டிரம்ப்
- 2025 சனிப்பெயர்ச்சி எப்போது?.. ராஜயோகம் பெறும் ராசியினர் யார் தெரியுமா?.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா
- ரேவதிக்கு 47 வயதில் டெஸ்ட்டியூப் பேபி.. அதுவிடுங்க, புன்னகை மன்னன் படத்துல இப்படி நடந்ததா? செம தில்
- இப்படியா அசிங்கப்படுத்துவீங்க? புகழால் விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து கோபமாக வெளியேறிய சௌந்தர்யா