கோயில் இசை கச்சேரிகளில் சினிமா பாடல்கள் பாட அனுமதியில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

12 hours ago
ARTICLE AD BOX

சென்னை: கோயில் இசை கச்சேரிகளில் சினிமா பாடல்கள் பாட அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் இசை கச்சேரிகள் நடத்தப்படும் போது பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கோயில் விழாக்களின்போது சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கோயிலுக்குள் பக்தி பாடல்கள் மட்டுமே பாட அனுமதி உண்டு என்று அறநிலையத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அறங்காவலர் நியமனம் தொடர்பான அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகவும் அறநிலையத்துறை பதில் அளித்துள்ளது.

The post கோயில் இசை கச்சேரிகளில் சினிமா பாடல்கள் பாட அனுமதியில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article