கொல்கத்தா கொடூரம்: நடந்தது என்ன? சிறுவன் வாக்குமூலம்!

4 hours ago
ARTICLE AD BOX

கொல்கத்தாவில், சகோதரர்களின் மனைவிகள் மற்றும் ஒரு மகள் மரணமடைந்து, சகோதரர்கள் மற்றும் ஒரு மகன் விபத்தில் படுகாயமடைந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக, சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

14 வயது பிரதீப் தேய், விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த நிலையி, பிப்ரவரி 19ஆம் தேதி நடந்தது என்ன என்பது பற்றி காவல்துறையிடம் கூறியிருக்கிறார்.

தனது தாய் சுதேஷ்னா, உறவினர் ரோமி இருவரும் கடைசி நேரத்தில் தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டனர். ஆனால், அவர்களை எனது தந்தை பிரணாய், உறவினர் பிரசன் இருவரும் விடவில்லை. அவர்களது நரம்புகளை துண்டித்து கொலை செய்துவிட்டனர்.

என்னையும், தலையணையை அமுத்திக் கொல்லப் பார்த்தனர். நான், யோகா பயின்றிருந்ததால், மூச்சைக் அடக்கி செத்தது போல நடித்ததால் உயிர் பிழைத்தேன் என்று கூறியிருக்கிறார்.

இதன் மூலம், மரணமடைந்த பெண்களே தற்கொலை செய்துகொண்டதாக, பிரணாய் மற்றும் பிரசன் சொன்னது பொய் என்ற தகவல் காவல்துறைக்குத் தெரிய வந்துள்ளது.

Read Entire Article