ARTICLE AD BOX
கேரளாவில் இருந்து திருப்பூர் பல்லடத்திற்கு மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கழிவுகள் அங்குள்ள குடோனில் பதுக்கிவைத்து எரிக்கப்படுவதால் மூச்சுத்திணறல் போன்ற உபாதைகளை பொதுமக்கள் எதிர்கொள்ளும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கழிவுகளுடன் வந்த லாரி ஒன்றை பொதுமக்கள் சிறைபிடித்த நிலையில் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.