ARTICLE AD BOX
குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு தொழிலில் வெற்றி, புகழ்.. கோடீஸ்வரராகும் யோகம்.. பணமழை கொட்டும்
குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் மகரம் ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி ஆரம்பமாகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் மகரம் ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மகரம்: மகரம் ராசிக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சியில் அருமையான காலகட்டமாக இருக்கும். இதுநாள் வரை ராசி, லக்னத்தில் குரு பார்வை இருந்து வந்தது. ஆனாலும், கேது 9 ஆம் இடத்தில் இருந்ததால் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பார்கள். 2 ஆம் இடத்தில் ராகு வந்து அமர்வதால் பேச்சில் மிகவும் கவனமா இருக்க வேண்டும். வைட்டமின் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கண் சார்ந்த பிரச்சனைகள், பல் புதிதாக வைப்பது, மூக்கு துவாரங்களில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.
ராகு 2 ஆம் இடத்தில் இருந்தால் கணவன் அல்லது மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். குரு பார்வை இருப்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. உங்களுடைய நன்மைக்காகத்தான் செய்வீர்கள். விரைய ஸ்தானத்துக்கும், 2 ஆம் இடத்துக்கும் குரு பார்வை இருப்பதால் நல்ல தூக்கம் வரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேண்டக்கூடிய விஷயங்கள் பழிக்கும்.
ஜாதகத்தில் குரு பார்வை இல்லையென்றால் நல்லது நடக்காது. விரைய ஸ்தானத்தில் 12 ஆம் இடத்தில் குரு பார்வை இருப்பதால் உங்களுக்கு தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். வெளியூருக்கு சென்று சிட்டிசன் சிப் வாங்குவது, வழக்குகள் சாதகமாக முடியும் யோகம் உண்டாகும். 10 ஆம் இடத்தில் குரு பார்வை இருப்பதால் தொழிலில் வெற்றி, புகழ் உண்டாகும். உங்களுக்கு புதிய புரோஜக்ட்கள் கிடைக்கும்.
6 ஆம் இடத்தில் குரு இருப்பதால் கேஸ்ட்ரோ பிரச்சனைகள் உண்டாகும். நிறைய அகத்திக்கீரை, முருங்கை கீரை எடுப்பது நல்லது. தேனும், நெய்யும் உடலில் சேர்ப்பதால் வாயு தொல்லைகள் நீங்கும். அடிமைத் தொழிலில் இருப்பவர்களுக்கு பிரச்சனை உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றம் உண்டாகும். தொழிலில் இருக்கக்கூடிய புரோஜகட், ஃபைல்ஸ் மாறுவதற்கான வாய்ப்புள்ளது.
மகர ராசியினருக்கு சில விஷயங்களை விட்டுக் கொடுப்பது நல்லது. மனைவியின் உடல்நிலை, கணவன் உடல்நிலையைப் பார்த்துக் கொள்வது நல்லது. காரணம் ராகு, 6 ஆம் இடத்தில் குரு இருப்பதால் மருத்துவ செலவு அடுத்த ஒரு வருடத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இதனைத் தடுக்க பவமான சுத்த ஹோமம் வீட்டில் செய்வது நல்ல பலன்களைத் தரும். மிருத்யுங்க ஜெபத்தை சொல்லிக் கொண்டிருப்பதும் ஏற்றத்தைக் கொடுக்கும்.
மகர ராசியைப் பொருத்தவரை பொருளாதாரத்தை ஒட்டி நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். போட்டித் தேர்வுகளை எழுதுபவர்களுக்கு கண்டிப்பாக ஜெயிப்பார்கள். புதிய கடன்களை வாங்கி ஒரு பிரச்சனையை முடிப்பீர்கள். அதிக வட்டிக்கு வாங்கிய கடன், நோயிலிருந்து விடுபடுவீர்கள்.
சந்தோஷ ரீதியாக 100க்கு 65 சதவீதம் நன்றாக இருக்கும், பொருளாதாரத்தில் 95 சதவீதமான ஏற்றம் உண்டாகும். மகிழ்ச்சி, நிம்மதி உண்டாகும் அமோகமான காலகட்டமாக இருக்கும்.
செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?:- பவமானசுத்த ஹோமம் வீட்டில் செய்வது நல்ல பலன்களைத் தரும். மிருத்யுங்க ஜெபத்தை சொல்லிக் கொண்டிருப்பதும் உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.
- குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு லைஃப்டைம் செட்டில்மெண்ட்.. இனி சொந்த வீடு, வாகனம்னு ஜொலிக்க போறீங்க
- குருப்பெயர்ச்சி: கஷ்டங்களில் இருந்து கன்னி ராசிக்கு விடுதலை.. பணத்தை கொட்டிக் கொடுக்க போகும் குரு
- குருப்பெயர்ச்சி: அஷ்டம சனியில் சிக்கும் சிம்மம்.. கை கொடுக்கும் குரு.. இனி அதிர்ஷ்டம் கொட்டும்
- குருப்பெயர்ச்சி: அஷ்டம சனியிடம் இருந்து தப்பித்து குருவிடம் சிக்கும் 'கடகம்'.. வச்சு செய்ய போகுது
- குருப்பெயர்ச்சி: உச்சத்தில் குரு ரிஷபத்துக்கு யோகமோ யோகம்.. அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும்
- குருப்பெயர்ச்சி: "காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது".. மேஷ ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு
- தமிழர்கள் தீவிரவாதிகள், நன்றிகெட்டவர்கள், திருடர்கள், நாகரீகமற்றவர்கள்.. விடாமல் "சீண்டும்" பாஜக!
- திருச்செல்வம் என்கிட்ட நேரடியா அப்படி கேட்டாரு! இதை எதிர்பார்க்கல! சிறகடிக்க ஆசை மீனா மகிழ்ச்சி
- கோவையில் ஹோம் லோன் போட்டு, புதிதாக வீடு கட்டியவருக்கு 4 வருடம் கழித்து ட்விஸ்ட்.. கோர்ட் குட் நியூஸ்
- Asthma home remedy: வெற்றிலை+ ஒரு துண்டு இஞ்சி போதும்! 48 நாளில் கரைந்தோடும் சளி! ஆஸ்துமாவுக்கு பைபை
- நகை அடகு வைக்க போறீங்களா? அப்போ இதை நோட் பண்ணுங்க.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய முடிவு
- தமிழக பட்ஜெட் ரூபாய் லோகோ மாற்றத்தால்.. புலம்பி தீர்க்கும் வட இந்திய நெட்டிசன்கள்!