ARTICLE AD BOX
Published : 27 Feb 2025 12:53 AM
Last Updated : 27 Feb 2025 12:53 AM
கும்பமேளா சென்று திரும்பும் வழியில் ஜேஎம்எம் எம்.பி. மகுவா விபத்தில் காயம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் மாநிலங்களவை எம்.பி. மகுவா மாஜி உள்ளிட்ட 4 பேர் கும்பமேளாவுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் சாலை விபத்தில் காயம் அடைந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜேஎம்எம் எம்.பி. மகுவா மாஜி தனது மகன், மருமகளுடன் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா கும்பமேளாவுக்கு சென்றார். திரிவேணி சங்கமத்தில் இவர்கள் புனித நீராடிய பிறகு நேற்று முன்தினம் இரவு ராஞ்சிக்கு புறப்பட்டனர்.
இந்நிலையில் இவர்களின் கார், நேற்று அதிகாலை 3.45 மணியளவில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் லத்தேகார் மாவட்டம் ஹாட்வாக் அருகில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியது.
இதில் மகுவா மாஜி, அவரது மகன் சோம்விட் மாஜி, மருமகள் கீர்த்தி ஸ்ரீவஸ்தவா, டிரைவர் புபேந்திர பாஸ்கி ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். இதையடுத்து இவர்கள் ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் அபாய கட்டத்தை கடந்துவிட்டதாகவும் இவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காரை சோம்விட் மாஜி ஓட்டியதாவும் அதிகாலையில் இவர் கண்ணயர்ந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசுப் பேருந்து - கார் மோதலில் 5 பேர் உயிரிழப்பு
- “மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்டது மகா சிவராத்திரி!” - ஈஷா நிகழ்வில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேச்சு
- செவிலியர் மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான பெரம்பலூர் காவலர் சஸ்பெண்ட்!
- தொழிலாளி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை - தென்காசி கோர்ட் தீர்ப்பு