ARTICLE AD BOX
Published : 11 Mar 2025 12:11 AM
Last Updated : 11 Mar 2025 12:11 AM
கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து நேரிட்ட கட்டிடத்தை அரசு கையகப்படுத்த கோரிக்கை

கும்பகோணத்தில் 2004-ல் தீ விபத்து நேரிட்ட பள்ளிக் கட்டிடத்தை இடிக்க அனுமதிக்காமல், அக்கட்டிடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தீ விபத்தில் குழந்தையை பறிகொடுத்த ஒருவரான மகேஷ் உள்ளிட்டோர் கும்பகோணம் மாநகராட்சி மேயர், ஆணையர், மாவட்ட எஸ்.பி. ஆகியோரிடம் நேற்று அளித்த கோரிக்கை மனு: கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள பள்ளியில் 2004, ஜூலை 16-ம் தேதி நேரிட்ட தீ விபத்தில் குழந்தைகள் 94 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து, குழந்தைகளை தீ விபத்தில் பறிகொடுத்த பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோர், அப்பள்ளி முன்பு கடந்த 21 ஆண்டுகளாக ஆண்டுதோறும் நினைவேந்தல் நடத்தி வருகிறோம். இந்நிலையில், தீ விபத்து நேரிட்ட கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட பள்ளி நிர்வாகத்தினர் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்தக் கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது. மாறாக, அக்கட்டிடத்தை அரசு கையகப்படுத்தி, தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக நினைவு அரங்கம் அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- மத்திய அரசு வேலைக்கான தேர்வில் ஆள்மாறாட்டம்: கோவையில் 8 வடமாநில இளைஞர்கள் கைது
- கிண்டல் செய்த காங்கிரஸுக்கு பேட்டால் பதில் சொன்ன ரோஹித்: சமூக வலைதளங்களில் பாஜக பதிலடி
- ராஜஸ்தானில் கிராம மக்கள் இந்துக்களாக மாறியதால் கோயிலாக மாறிய சர்ச்: அர்ச்சகராக மாறிய கிறிஸ்தவ மத போதகர்
- தூத்துக்குடி அருகே பள்ளி மாணவன் மீது கொலைவெறி தாக்குதல் - திருமாவளவன் கண்டனம்