கானா பாடகி இசைவாணிக்கு எதிராக அவதூறு பரப்பிய 3 பேருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

8 hours ago
ARTICLE AD BOX

சென்னை: ஐயப்ப சுவாமி குறித்து அவதூறு பாடல் பாடிய இசைவாணிக்கு எதிராக அவதூறு பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுவாமி ஐயப்பனை பற்றியும், ஐயப்பனை வழிபடும் பக்தர்களின் விரதம் குறித்தும், ஐயப்பனின் மகிமை குறித்தும் அவதூறாக பாடல் பாடியதாக கானா பாடகி இசைவாணிக்கு எதிரான சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டது. இது தொடர்பாக இசைவாணி அளித்த புகாரின் அடிப்படையில் ரவிச்சந்திரன், ஜோதிநாதன், அழகு பிரகாஷ்பதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.இந்த மனுக்கள் நீதிபதி கார்த்திக்கேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி, ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் ரவிச்சந்திரன், ஜோதிநாதன், அழகு பிரகாஷ்பதி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். எதிர்காலத்தில் சாதி ரீதியாகவோ, பெண்களுக்கு எதிராகவோ சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட மாட்டேன் என்று உத்தரவாத மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post கானா பாடகி இசைவாணிக்கு எதிராக அவதூறு பரப்பிய 3 பேருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் appeared first on Dinakaran.

Read Entire Article