ARTICLE AD BOX
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, கனகம்மாசத்திரம் அருகே முத்துகொண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 46 வயதான வெங்கடேசன். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவருக்கு, 33 வயதான சந்தியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், இவர் கடந்த 3ம் தேதி, சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது இவர் மீது கார் மோதிய விபத்தில், அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவாலங்காடு போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி சந்தியாவுக்கும் தோமூரைச் சேர்ந்த 45 வயதான லோகு (எ) லோகநாதன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், தங்களின் கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருந்ததால், அவரை கொலை செய்ய சந்தியா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம் போட்டுள்ளார்.
அதன் படி, சம்பவத்தன்று தனது கணவர் சென்ற பைக் மீது காரை மோதவிட்டு பின்னர் இரும்பு ராடால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளார். இதையடுத்து, வெங்கடேசன் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக வழக்கை மாற்றிய போலீசார், இந்த குற்ற சம்பவம் தொடர்பாக சந்தியா, அவரது கள்ளக்காதலன் லோகநாதன் (45), சந்தியாவின் தம்பி சண்முகம் (30) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.
தற்போது வரை, ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், திருவாலங்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: பெற்றோர்களே கவனம்!! நெருங்கிய நண்பரின் மகளை கடத்திச் சென்று, நபர் செய்த கொடூரம்!!!
The post கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த முன்னாள் ராணுவ வீரர்; ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம்.. appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.