ARTICLE AD BOX
Published : 18 Mar 2025 05:10 AM
Last Updated : 18 Mar 2025 05:10 AM
கர்நாடகாவில் ரூ.75 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 2 தென்னாப்பிரிக்க பெண்கள் கைது

கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் ரூ.75 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதாக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மங்களூரு மாநகர காவல் ஆணையர் அனுபம் அகர்வால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் 2 பெண்கள் போதைப் பொருட்களை கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, அவர்களை பிடித்து சோதனையிட்டதில் ரூ.75 கோடி மதிப்புள்ள 37.870 கிலோ மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் சிக்கின. இதையடுத்து தென்னாப்பிரிக்காவை சேர்ந்த அந்த 2 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
இதில் முதல் குற்றவாளியான பம்பா ஃபன்டா (31) என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பெங்களூருவில் வசித்து வருகிறார். அவரது கூட்டாளியான அபிகேல் அடோனிஸ் (30), கடந்த 2020 முதல் மங்களூருவில் வசிக்கிறார். கடந்த வாரம் மங்களூருவில் போதைப் பொருள் விற்ற வழக்கில் கைதான ஹைதர் அலி (25) அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த 2 பெண்கள் குறித்த தகவல் கிடைத்தது.
இவர்களுடன் தொடர்பில் இருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 6 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது கைதாகியுள்ள 2 பெண்களும் மங்களூருவில் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் 37 முறை மும்பைக்கும், 22 முறை பெங்களூருவுக்கும் விமானத்தில் பயணித்துள்ளனர். சூட்கேஸில் போதைப் பொருட்களை மறைத்து வைத்து கடத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்கள், 2 பாஸ்போர்ட்கள் மற்றும் ரூ.18 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அனுபம் அகர்வால் தெரிவித்தார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- திருப்பதி தேவஸ்தானம் ஜூன் மாத ஆன்லைன் டிக்கெட் விவரங்கள்
- டிஜிட்டல் சுகாதார திட்டங்களில் கலங்கரை விளக்கமாக வழிகாட்டுகிறது இந்தியா: மத்திய இணையமைச்சர் பெருமிதம்
- பிஹார் மாணவியின் மருத்துவர் கனவு: உதவி செய்வதாக மத்திய அமைச்சர் உறுதி
- இந்தி தேசிய மொழி; ஆங்கிலம் சர்வதேச மொழி: முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து