கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற தொடர்ந்து முயற்சி: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

11 hours ago
ARTICLE AD BOX

சென்னை: விதிமுறைகளை மீறி இயங்கும் சுங்கச்சாவடிகளை அகற்ற தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளப்படுகிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில் விதிமுறைகளை மீறி இயங்கும் சுங்கச்சாவடியை அகற்ற ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரைக்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு; கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற 2,3 கடிதங்களை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அனுப்பிவிட்டோம். சுங்கச்சாவடியை அகற்றாவிட்டாலும் உள்ளூர்காரர்களுக்கு பாஸாவது வழங்குமாறு கூறியுள்ளோம். ஒன்றிய அரசிடம் மீண்டும் இதே கோாிக்கையை வலியுறுத்துவோம். விதிமுறைகளை மீறி இயங்கும் சுங்கச்சாவடிகளை அகற்ற தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்று விளக்கம் அளித்தார்.

The post கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற தொடர்ந்து முயற்சி: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article