கணவனை குத்தி கொலை செய்துவிட்டு.. கள்ளக்காதலனுடன் ஹனிமூன் சென்ற மனைவி..!! விசாரணையில் பகீர்

2 hours ago
ARTICLE AD BOX

மீரட்டைச் சேர்ந்த பெண், கள்ள காதலனுடன் சேர்ந்து, தனது கணவரை கத்தியால் குத்திக் கொன்று, அவரது உடலை 15 துண்டுகளாக வெட்டி, சிமென்ட் நிரப்பப்பட்ட டிரம்மில் போட்டு அடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரை சேர்ந்த செளரப் ராஜ்புத் 2016ஆம் ஆண்டு கவுரிப்புராவைச் சேர்ந்த முஸ்கான் ரஸ்தோகியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரின் குடும்பத்தினரும் இவர்களின் திருமணத்தை ஏற்கவில்லை, இதனால் இருவரும் தனியாக இந்திரா நகர் பிளாக்-1ல் வீடு வாடகைக்கு எடுத்து, மூன்று வயது மகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மனைவி ரஸ்தோகிக்கு வேறொரு நபருடன் தொடர்ந்து இருந்துள்ளது.

ரகசிய உறவுக்கு கணவன் இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய தீட்டம் தீட்டி, கத்தியால் குத்தியுள்ளார். கடந்த 4 ஆம் தேதி முதல் காணாமல் போனதை தொடர்ந்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். மனைவி முஸ்கான் மற்றும் காதலன் சாஹில் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதுடன், கொலையின் பிறகு சுற்றுலா சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், மனைவி மற்றும் அவரது காதலன் சேர்ந்து, அவரது கணவனை குத்திக்கொன்று, உடலை துண்டுகளாக வெட்டி, அதை சிமெண்ட் நிறைந்த டிரம்மில் மூடியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நபரின் உடல் மீட்கப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, சௌரபின் குடும்பத்தின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலையில் ஈடுபட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்தது.

Read more: ஆடை கட்டுப்பாடு முதல் பறவைகளுக்கு உணவு அளிப்பது வரை.. வினோதமான சட்டங்கள் கொண்ட விசித்திரமான நாடுகள்..!!

The post கணவனை குத்தி கொலை செய்துவிட்டு.. கள்ளக்காதலனுடன் ஹனிமூன் சென்ற மனைவி..!! விசாரணையில் பகீர் appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article