ARTICLE AD BOX
கடுமையான சுவாசக் கோளாறால் உயிருக்கு ஆபத்தான நிலையில் போப் பிரான்சிஸ்; மருத்துவர்கள் தீவிர சிகிச்சை
செய்தி முன்னோட்டம்
அதிக ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படும் நீண்டகால ஆஸ்துமா சுவாச நோயுடன் போராடி வருவதால், போப் பிரான்சிஸ் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதாக வாடிகன் சனிக்கிழமை (பிப்ரவரி 22) தெரிவித்துள்ளது.
நிமோனியா மற்றும் சிக்கலான நுரையீரல் தொற்று காரணமாக ஒரு வாரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 88 வயதான போப்பாண்டவர், ரத்த சோகையுடன் தொடர்புடைய குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை காரணமாக ரத்த மாற்றத்திற்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.
பிரான்சிஸிற்கு சிறப்பான சிகிச்சை வழங்கி வந்தாலும், அவர் இன்னும் குறிப்பிடத்தக்க ஆபத்தில் இருப்பதாகவும், ஆபத்தான ரத்த தொற்றுநோயான செப்சிஸ் உள்ளது கவலையளிக்கும் விஷயமாக உள்ளதாகவும் ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையின் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
செப்சிஸ்
உயிருக்கு ஆபத்தான செப்சிஸ்
மருத்துவமனையின் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைத் தலைவர் டாக்டர் செர்ஜியோ அல்ஃபியேரி, போப்பின் வயது மற்றும் ஏற்கனவே உள்ள சுவாசப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, செப்சிஸ் உயிருக்கு ஆபத்தானது என்று கூறினார்.
அவரது உடல்நிலை மோசமாக இருந்தபோதிலும், முந்தைய நாளை விட அதிக வலி இருந்தபோதிலும், பிரான்சிஸ் முழுமையாக சுயநினைவுடன் இருப்பதாகவும், தனது பணியில் ஈடுபடுவதாகவும் வாடிகன் உறுதியளித்தது.
தன்னுடைய உடல்நிலையின் தீவிரத்தை ஒப்புக்கொண்டுள்ள போப், ஆபத்துகளைப் பற்றி பொதுமக்களிடம் தெரிவிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, உடல்நலக்குறைவால் அவர் பதவி விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஊகங்களும் எழுந்துள்ளன. ஆனால் அவை வரும் வதந்தியே என வாடிகன் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.