கடனை முன்கூட்டியே செலுத்தினால் அபராதம் கிடையாது.. ரிசர்வ் வங்கி சொல்லப்போகும் குட் நியூஸ்

2 days ago
ARTICLE AD BOX

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றவர்கள் இனி எப்போது வேண்டுமானாலும் கடனை முன்கூட்டியே செலுத்தலாம். ரிசர்வ் வங்கி புதிய வரைவை தயாரித்துள்ளது, இதன் மூலம் கடன் முன்கூட்டியே செலுத்தும் போது வங்கிகள் அபராதம் வசூலிக்க முடியாது.

கடனை முன்கூட்டியே செலுத்தினால் அபராதம் கிடையாது.. ரிசர்வ் வங்கி சொல்லப்போகும் குட் நியூஸ்

வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கினால், முன்கூட்டியே செலுத்தினால் அபராதம் விதிக்கப்பட்டது. மாறும் வட்டி விகிதக் கடன்களுக்கு இந்த முன்கூட்டியே செலுத்தும் கட்டணம் இருந்தது.

வங்கி விதிகள்

விரைவில் இந்த விதி மாறுகிறது. இனி எப்போது வேண்டுமானாலும் கடனை செலுத்தலாம். இனி கடன் முன்கூட்டியே செலுத்தினால் எந்த வங்கியும் அபராதம் வசூலிக்க முடியாது.

ரிசர்வ் வங்கி

சிறு, குறு நிறுவனங்களுக்கும் இந்த விதி பொருந்தும். ரிசர்வ் வங்கி இதற்கான வரைவை தயாரித்துள்ளது. மார்ச் 21, 2025 வரை பங்குதாரர்களிடம் கருத்து கேட்ட பின் இறுதி முடிவு எடுக்கப்படும்.

ன்கூட்டியே செலுத்தும் கட்டணம்

ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள எந்த கடன் வழங்குபவரும் முன்கூட்டியே செலுத்தும் கட்டணம் வசூலிக்க கூடாது. தற்போது சில நிறுவனங்கள் மாறும் வட்டி விகித கடன்களுக்கு முன்கூட்டியே செலுத்தும் கட்டணம் வசூலிக்கின்றன.

அபராதம் விதிக்க முடியாது

வணிகம் தவிர மற்ற கடன்களுக்கு முன்கூட்டியே செலுத்தும் கட்டணம் இல்லை. Tier 1 & 2 வங்கிகள், NBFC-கள் வணிக நோக்கங்களுக்காக தனிநபர்கள், MSME-களுக்கு அபராதம் விதிக்க முடியாது.

இந்த வங்கியில் யாரும் பணம் எடுக்கவோ.. டெபாசிட் செய்யவோ முடியாது.. ரிசர்வ் வங்கி உத்தரவு

Read Entire Article