கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடி செலவு

2 hours ago
ARTICLE AD BOX

Published : 27 Feb 2025 06:45 AM
Last Updated : 27 Feb 2025 06:45 AM

கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடி செலவு

<?php // } ?>

கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் கூறியுள்ளதாவது: கடந்த 2023-24-ம் நிதியாண்டில் நீதிமன்ற வழக்குகளுக்காக ரூ.66 கோடியை மத்திய அரசு செலவழித்துள்ளது. கடந்த 2022-23-ம் நிதியாண்டை விட இது ரூ.9 கோடி அதிகமாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நீதிமன்ற வழக்குகளுக்காக ரூ.409 கோடிக்கும் அதிகமாக மத்திய அரசு செலவு செய்துள்ளது.

2014-15-ம் நிதியாண்டில் ரூ.26.64 கோடியும், 2015-16-ல் ரூ.37.43 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது.

7 லட்சம் வழக்கு நிலுவை: நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் மத்திய அரசு சம்பந்தப்பட்ட வகையில் சுமார் 7 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் மத்திய நிதியமைச்சகம் சார்பில் மட்டும் சுமார் 2 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு அந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article