ARTICLE AD BOX
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியும் நிலவி வருவதால் இன்றும் (20-03-2025), நாளையும் (21-03-2025) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பருதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. அதன்படி 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் மிதமான சூழல் ஏற்படலாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.