ARTICLE AD BOX
ஓபிசி பிரிவினருக்கு 42 சதவிகித இட ஒதுக்கீடு.. தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
ஹைதராபாத்: உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 42 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை அமல்படுத்துவது தொடர்பாக அரசியல் அமைப்பில் திருத்தம் செய்ய பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த வேண்டும் எனவும் இதற்காக அனைத்து கட்சிகளுக்கும் ரேவந்த் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார்.
தெலுங்கனாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி வகித்து வருகிறார். ஆட்சிக்கு வந்தது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை ரேவந்த் ரெட்டி எடுத்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கானா சட்டமன்றத்தில் இன்று உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 42 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேறியுள்ளது.

சட்டமன்றத்தில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா விவாதத்தின் போது தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலுங்கானாவில் எதிர்க்கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் சேர்ந்து இவ்விவகாரம் தொடபாக பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும். அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்த வேண்டியுள்ளது" என்றார்.
முன்னதாக இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய, தெலுங்கானா எம்.எல்.ஏ கங்குலா கமலாகர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு எப்படி தமிழகத்தில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது எனவும் பீகாரில் இந்த இட ஒதுக்கீடு கடந்த ஆண்டு முயற்சித்தும் தோல்வியில் முடிந்தது ஏன்? என்பது குறித்தும் விரிவாக பேசினார்.
கடந்த 1992 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி இண்டிஹ்ரா சவஹனே அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி பேசிய அவர், இதன் மூலமே தமிழக அரசு வெற்றிகரமாக 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடிந்தாதகவும், சாதி கணக்கெடுப்பு அறிவியல் பூர்வமாகவும் விரிவாகவும் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வெளிப்படையாகக் கூறியிருப்பதை சுட்டிக்காட்டினார்.
இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றால், தற்போது சட்டமன்றத்தில் நிறைவேறியிருக்கும் இந்த மசோதாவுக்கு பீகாரில் என்ன கதி ஏற்பட்டதோ அதே கதிதான் ஏற்படும் எனவும் கூறினார். விரிவாக கணக்கெடுப்பு இரண்டு முறை நடத்தப்பட்டதன் விளைவே தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு வெற்றிகரமாக அமல்படுத்த முடிந்ததாகவும்,தெலுங்கானாவில் ஏன் கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
- ஆடு வளர்ப்பது அழகு பார்க்க கிடையாது.. பாகிஸ்தானியர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்த டிரம்ப்!
- குண்டுமணி அளவு தங்கமாவது வாங்கி வைங்க.. வேண்டாத வேலை பார்த்த ட்ரம்ப்! இனி தொடர்ந்து உச்சம் தானாம்!
- இறங்கியடித்த நம் உளவுத்துறை.. வங்கதேச ராணுவ தளபதியை முடிக்க நினைத்த பாகிஸ்தானுக்கு விழுந்த அடி- மாஸ்
- சிறகடிக்க ஆசை: மீனாவிடம் சிந்தாமணியின் கணவர் சொன்ன வார்த்தை.. விஜயாவை மாட்டி விட்ட முத்து.. செம சம்பவம்
- Thengai Poo: "தேங்காய் பூ தேங்காய் பூவு"னு கூவி கூவி விற்பாங்களே! அந்த பூ உடல் எடையை குறைக்குமாமே!
- பழைய ஓய்வூதிய திட்டம்.. கைவிரித்த தங்கம்.. அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு
- குருப்பெயர்ச்சி: ராஜயோகம் பெறும் 3 ராசியினர் யார் தெரியுமா?.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
- பங்கு சந்தையில் பணம் போட்டவர்களும், தங்கத்தில் பணத்தை போட்டவர்களும்.. அடுத்தடுத்து நடந்த ட்விஸ்ட்
- புக் செய்த சீட்டை ஆக்கிரமித்த பயணிகள்! பெங்களூர் ஐடி ஊழியர் செய்த தரமான செயல்.. ரயில்வேக்கு தேவைதான்
- அசத்துதே அரசு கேபிள்..தூக்கி வீசப்படும் தனியார் செட்டாப் பாக்ஸ்கள்! அடடே வருதே IPTV.. செம அறிவிப்பு
- பிந்துகோஷ் கடைசி நொடிகள்.. பங்களா, 10 நாய், கார்.. அப்படி வாழ்ந்தாங்களே பிந்து கோஷ்.. பெஸ்ட் டான்சர்
- உதயம் தியேட்டரை தொடர்ந்து.. அடுத்த ஷாக்.. சென்னையில் மூடப்படும் இன்னொரு பிரபல தியேட்டர்.. எங்கே?