ARTICLE AD BOX
சேலம்: சேலம் ரயில் நிலைய 4வது நடைமேடைக்கு நேற்று அதிகாலை 3.35 மணிக்கு லோக்மான்யதிலக்-கோவை குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. சில பயணிகள் இறங்கி கடைகளில் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு ரயிலில் ஏறினர். 3 நிமிடத்தில் ரயில் புறப்பட்டபோது, ஆவின் பூத் பகுதியில் இருந்து தண்ணீர் பாட்டிலுடன் ஒரு பயணி ரயிலில் ஏற ஓடிச்சென்றார். அவர் எஸ்.7 பெட்டியின் படிக்கட்டில் கால் வைத்தபோது தவறி, நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் விழுந்தார்.
தண்டவாளத்தில் சிக்கிய நிலையில், தலை துண்டாகி பலியானார். ரயில் சென்ற பிறகு சேலம் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர், கர்நாடகா மாநிலம் குல்பர்கா நயநூஹல்லாவை சேர்ந்த முகமது நசீருதீன்நடாப் (42), வெல்டிங் தொழிலாளியான இவர், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற தம்பியுடன் வந்தபோது தவறிவிழுந்து பலியானது தெரியவந்தது.
The post ஓடும் ரயிலில் ஏறிய பயணி தலை துண்டாகி உயிரிழப்பு appeared first on Dinakaran.