ARTICLE AD BOX
Published : 27 Feb 2025 05:56 AM
Last Updated : 27 Feb 2025 05:56 AM
ஒருநாள் போட்டி தரவரிசை: ஷுப்மன் கில் முதலிடத்தில் நீடிப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஷுப்மன் கில், வங்கதேச அணிக்கு எதிராக 101 ரன்களையும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 46 ரன்களையும் சேர்த்திருந்தார். இதன் மூலம் அவர், 21 ரேட்டிங் புள்ளிகளை பெற்று மொத்தம் 817 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார்.
2-வது இடத்தில் உள்ள பாகிஸ்தானின் பாபர் அஸமுக்கும், ஷுப்மன் கில்லுக்குமான இடைவெளி 23 புள்ளியில் இருநது 47 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசிய விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் 2 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை அடைந்துள்ளார். நியூஸிலாந்து அணியின் வில் யங் 8 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தையும், டாம் லேதம் 11 இடங்கள் முன்னேறி 30-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ரச்சின் ரவீந்திரா 18 இடங்கள் முன்னேற்றம் கண்டு 18-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி 4 இடங்கள் முன்னேறி 50-வது இடத்தையும், ஜோஷ் இங்லிஷ் 18 இடங்கள் முன்னேறி 81-வது இடத்தையும், வங்கதேசத்தின் தவூஹித் ஹிர்டோய் 18 இடங்கள் முன்னேறி 64-வது இடத்தையும், ஜாகர் அலி 64 இடங்கள் முன்னேறி 94-வது இடத்தையும் அடைந்துள்ளனர்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
- ஜன்னல் வழியாக ரயில் பயணிகள் மீது தண்ணீர் ஊற்றிய வாலிபர் சிக்கினார்
- பிஹாரில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் பாஜக எம்எல்ஏக்கள் 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
- தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டு தடையே போதுமானது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்