ARTICLE AD BOX
Published : 06 Mar 2025 08:09 AM
Last Updated : 06 Mar 2025 08:09 AM
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலி முன்னேற்றம்!

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் அரை இறுதி ஆட்டத்தில் 84 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்த இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 747 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
அதேவேளையில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா 2 இடங்களை இழந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஷுப்மன் கில் 791 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். விராட் கோலிக்கும், கில்லுக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் 44 ஆக உள்ளது. தென் ஆப்பிரிக்க அணியின் ஹன்ரிச் கிளாசன் ஒரு இடம் முன்னேறி 760 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தானின் பாபர் அஸம் 770 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடர்கிறார்.
இந்திய அணியின் ஸ்ரேயஸ் ஐயர் 702 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் இப்ராகிம் ஸத்ரன் 13 இடங்கள் முன்னேறி 676 புள்ளிகளுடன் 10-வது இடத்தை அடைந்துள்ளார். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் இரு இடங்கள் முன்னேற்றம் கண்டு முதலிடத்தை பிடித்துள்ளார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- ரூ.274 கோடியில் ஒன்றரை ஆண்டாக நடந்துவந்த எழும்பூர் - கடற்கரை 4-வது பாதை பணி நிறைவு: விரைவில் சோதனை ஓட்டம்
- ஓய்வை அறிவித்தார் சரத் கமல்: சென்னை டபிள்யூடிடி தொடருடன் விடைபெறுகிறார்
- கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்கியது: சாம்பல் புதனையொட்டி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை
- இக்னோ பட்டமளிப்பு விழா: சென்னை மண்டலத்தில் 2 மாணவர்கள் தங்கப்பதக்கம்