ஒன்றிய பட்ஜெட் ஒரு மாயாஜால அறிக்கை: எடப்பாடி பழனிசாமி கருத்து

2 hours ago
ARTICLE AD BOX

சென்னை: ஒன்றிய பட்ஜெட் ஒரு மாயாஜால அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்ததாக தோன்றுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் எந்த சிறப்பு திட்டமும் இல்லை. விவசாய வளத்தைப் பெருக்க நதிநீர் இணைப்பு திட்டங்கள் குறித்தும் அறிவிப்பும் இல்லை. ஒன்றிய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு கணிசமாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த அடிப்படை சுங்கவரியில் மாற்றம் அறிவிக்கப்பட்டது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அறிவிப்பு இல்லாதது தமிழ்நாட்டுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

The post ஒன்றிய பட்ஜெட் ஒரு மாயாஜால அறிக்கை: எடப்பாடி பழனிசாமி கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article