ARTICLE AD BOX
Published : 22 Mar 2025 12:07 AM
Last Updated : 22 Mar 2025 12:07 AM
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 2,000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் கடந்த 18-ம் தேதி காலை விநாடிக்கு 500 கனஅடியாக பதிவான நீர்வரத்து, 19-ம் தேதி காலை 1,500 கனஅடியாக அதிகரித்தது. நேற்று முன்தினமும் விநாடிக்கு 1,500 கனஅடியாகவே நீடித்த நீர்வரத்து, நேற்று காலை 2,000 கனஅடியாக அதிகரித்தது.
இதனிடையே, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 425 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 586 கனஅடியாக
அதிகரித்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் வரத்தை விட, நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 108.39 அடியாகவும், நீர் இருப்பு 76.14 டிஎம்சியாகவும் இருந்தது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 118-வது இடத்தில் இந்தியா
- எதிர்குரலை ஒடுக்கும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: அமலாக்க துறைக்கு எஸ்டிபிஐ கண்டனம்
- “நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாங்கம்” - யோகி ஆதித்யநாத் அரசு மீது உ.பி. பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு
- “சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை சரிசெய்யாமல் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுகிறது திமுக அரசு” - ஹெச்.ராஜா