ARTICLE AD BOX

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியிலிருந்து சத்யசாய் மாவட்டத்தில் உள்ள இந்துபூருக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் மது போதையில் ஒரு பயணி பேருந்து டயருக்கு பக்கத்தில் இருந்த ஸ்டெப்னி டயர் மீது தொங்கியபடியே பயணம் செய்துள்ளார். இதனை பார்த்ததும் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனால் ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி கீழே இறங்கி பார்த்தார். அப்போது பின்பக்க ஸ்டெப்னி டயரில் மதுபோதையில் தொங்கியபடி ஒருவர் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் 15 கிலோமீட்டர் தூரம் இப்படி தொங்கியபடியே பயணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.