ஐபிஎல் ரசிகர்களுக்காக ஜியோஹாட்ஸ்டார் புதிய சலுகை அறிவிப்பு

8 hours ago
ARTICLE AD BOX
ஐபிஎல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்; ஜியோஹாட்ஸ்டார் புதிய சலுகை அறிவிப்பு

ஐபிஎல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்; ஜியோஹாட்ஸ்டார் புதிய சலுகை அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 17, 2025
03:01 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2025 சீசன் தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஜியோ ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

இது 4K இல் ஜியோஹாட்ஸ்டாரை இலவசமாக அணுகுவதையும், ஏற்கனவே உள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு ஜியோஃபைபர் அல்லது ஜியோஏர்ஃபைபரின் 50 நாள் இலவச பயன்பாட்டையும் வழங்குகிறது.

ஜியோ சிம் மற்றும் ₹299 அல்லது அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ் திட்டத்துடன், பயனர்கள் தங்கள் மொபைல் அல்லது டிவியில் 4K இல் நேரடி கிரிக்கெட் ஒளிபரப்பை 90 நாட்களுக்கு பார்க்க முடியும்.

இந்த சலுகையில் 800+ டிவி சேனல்கள், 11+ ஓடிடி ஆப்ஸ்களுக்கான அணுகல் மற்றும் தடையற்ற வீட்டு பொழுதுபோக்கு அனுபவத்திற்காக வரம்பற்ற வைஃபை ஆகியவற்றைக் கொண்ட ஜியோஃபைபர் அல்லது ஜியோஏர்ஃபைபரின் இலவச சோதனையும் அடங்கும்.

எவ்வாறு பெறுவது?

சலுகையை எவ்வாறு பெறுவது?

தற்போதுள்ள ஜியோ பயனர்கள்: மார்ச் 17 முதல் மார்ச் 31 வரை ₹299 (1.5ஜிபி/நாள் அல்லது அதற்கு மேல்) ரீசார்ஜ் செய்து பெறலாம்.

புதிய ஜியோ பயனர்கள்: ₹299 அல்லது அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ் திட்டத்துடன் ஜியோ சிம்மை பெறுவதன் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கிரிக்கெட் சீசனின் தொடக்க நாளான மார்ச் 22 முதல் இந்த ஜியோஹாட்ஸ்டார் பேக் செயல்படுத்தப்படும்.

மார்ச் 17 க்கு முன்பு ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்கள் ₹100 மதிப்புள்ள ஆட்-ஆன் பேக்கை வாங்குவதன் மூலம் சலுகைகளைப் பெறலாம்.

முந்தைய ஐபிஎல் சீசன் ஜியோசினிமாவில் இலவசமாக ஒளிபரப்பட்ட நிலையில், ஹாட்ஸ்டாருடனான ஒருங்கிணைப்பிற்குப் பிறகு, தற்போது கட்டண சேவைக்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article