ஐபிஎல் கிரிக்கெட்: முதல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி

1 day ago
ARTICLE AD BOX

கொல்கத்தா,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று தொடங்கியது. கடந்த 2008-ம் ஆண்டு பி.சி.சி.ஐ. சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர் 18-வது ஆண்டாக வீறுநடை போடுகிறது. இந்த நிலையில் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. முதல் நாளான இன்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி 16.2 ஓவரில் 3 விக்கெட் இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பெங்களூரு அணியின் கோலி 59, பில் சால்ட் 56, கேப்டன் பட்டிதார் 34 ரன்கள் எடுத்தனர்.கொல்கத்தா அணி கேப்டன் ரஹானே 56, சுனில் நரின் 44, ரகுவன்ஷி 30 ரன்கள் எடுத்தனர்.பெங்களூரு அணியின் க்ருணால் பாண்டியா 3, ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கொல்கத்தா அணியின் அரோரா, வருண் சுனில் நரின் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Read Entire Article