ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: மழையால் கைவிடப்பட்ட பாகிஸ்தான் vs வங்கதேசம் கிரிக்கெட் ஆட்டம்!

3 hours ago
ARTICLE AD BOX

இரு அணிகளும் ஏற்கனவே இந்தியா மற்றும் நியூசிலாந்திடம் தோல்வியடைந்து அரையிறுதி போட்டியில் இருந்து வெளியேறிவிட்டன, மேலும் மழை பெய்தது இருவருக்கும், குறிப்பாக நடப்பு சாம்பியனான பாகிஸ்தானுக்கு ஏமாற்றமளித்தது. அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

ராவல்பிண்டி நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா குரூப் பி ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து, கடந்த திங்களன்று ராவல்பிண்டியில் பங்களாதேஷுக்கு எதிராக ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் பிளேஆஃப் இடத்தை உறுதி செய்தது.

துபாயில் நடைபெற்ற வங்கதேசம், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் அந்த அணிகளை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 2023 ஆம் ஆண்டில் 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு பாகிஸ்தான் முதல் சுற்றைத் தாண்டாத மூன்றாவது ஐசிசி போட்டி இதுவாகும்.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் உதவி பயிற்சியாளர் அசார் மஹ்மூத் கூறுகையில், "ஐசிசி தொடர்களில் நாங்கள் சரியாக விளையாடாதது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டங்களில் பேட்ஸ்மேன்கள் 308 டாட் பால்களை விளையாடியதால், தொடக்க பேட்ஸ்மேன் ஃபகார் ஜமான் மற்றும் சைம் அயூப் ஆகியோருக்கு ஏற்பட்ட காயங்கள் அணியை பாதித்ததாக மஹ்மூத் நம்பினார்.

"நாங்கள் இந்த வடிவத்தில் நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம், ஆனால் இந்த போட்டியில் காயங்கள் காரணமாக அது சரியாக செல்லவில்லை" என்று மஹ்மூத் கூறினார். 

“இந்தியாவுக்கு எதிராக நாங்கள் எங்கள் மீது நிறைய அழுத்தத்தை எடுத்தோம், ஆனால் நாங்கள் எங்கு மேம்படுத்த வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இது தகவமைத்துக் கொள்வது மற்றும் பொறுப்பை எடுத்துக்கொள்வது பற்றியது” என்று மஹ்மூத் மேலும் கூறினார்.

இன்றைய மேட்ச் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. குரூப் ஏ பிரிவில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 ஐ நடந்தி வரும் பாகிஸ்தான் கடைசி இடத்தைப் பிடித்தது.

நாளை ஆப்கனும், ஆஸ்திரேலியாவும் லாகூரில் பிற்பகல் 2.30 மணிக்கு மோதுகிறது.

Manigandan K T

TwittereMail
மணிகண்டன், முதுகலை அரசியல் அறிவியல் பட்டம் பெற்றவர். அச்சு ஊடகம், டிஜிட்டல் ஊடகம் மற்றும் மொழிபெயர்ப்புத் துறையில் 10+ ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். செய்திகளை மொழிபெயர்ப்பு செய்தல், பயணம், சினிமா, கிரிக்கெட் சார்ந்த கட்டுரைகள் எழுதுதல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் தேசம், சர்வதேசம், விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், href= https://tamil.hindustantimes.com/topic/cricket>கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
Read Entire Article