ARTICLE AD BOX
பெஷாவர்: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே எல்லைப்பிரச்னை நீடித்து வருகின்றது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் புதிய எல்லைச் சாவடி அமைக்கும் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இதன் காரணமாக கடந்த 11 நாட்களாக டோர்காம் எல்லை மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே மோதல் வெடித்த நிலையில் நேற்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் எந்த உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை. இதனிடையே இது தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தலிபான் பாதுகாப்பு படைகள் தானியங்கி ஆயுதங்களுடன் பாகிஸ்தானின் எல்லைப் பாதையை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தியது. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
The post எல்லையில் ஆப்கான்-பாகிஸ்தான் துப்பாக்கி சூடு appeared first on Dinakaran.