என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத்தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

14 hours ago
ARTICLE AD BOX

சென்னை: என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது.தேசிய உணவக மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் (என்சிஎச்எம்சிடி) இயங்கும் 78 கல்வி மையங்களில் கற்று தரப்படும் பிஎஸ்சி விருந்தோம்பல் மற்றும் உணவக நிர்வாகப் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (என்சிஎச்எம் ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி 2025-26ம் கல்வியாண்டுக்கான என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத்தேர்வு கணினி வழியில் ஏப்ரல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் 16ல் தொடங்கி பிப்ரவரி 28ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுசார்ந்த கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், 011-40759000/69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது nchm@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத்தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article