உலகின் மிகவும் மாசடைந்த தலைநகரம் டெல்லி: ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

12 hours ago
ARTICLE AD BOX

புதுடெல்லி: உலகின் மிகவும் மாசடைந்த தலைநகரங்களில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாக ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வௌியாகி உள்ளது. சுவிஸ் நாட்டின் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐக்யூஏர் உலக காற்று தர அறிக்கை 2024ஐ வௌியிட்டுள்ளது. அதன்படி, உலகின் மிகவும் மாசடைந்த நாடுகளாக சாட், வங்கதேசம், பாகிஸ்தான், காங்கோ மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகள் உள்ளன. குறிப்பாக உலகின் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் இந்தியாவின் அசாமில் உள்ள பைர்னிஹாட், டெல்லி, பஞ்சாப்பில் உள்ள முல்லன்பூர், பரிதாபாத், லோனி, புதுடெல்லி, குருகிராம், கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாடி, முசாபர்நகர், ஹனுமன்கர் மற்றும் நொய்டா ஆகிய 13 நகரங்கள் உள்ளன. இதில் குறிப்பாக அசாமின் பைர்னிஹாட் நகரம் உலகின் மாசுற்ற நகரங்களில் முதலிடத்தில் உள்ளது.

அதேபோல் உலகின் மாசடைந்த தலைநகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. உலகின் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் கடந்த 2023ம் ஆண்டில் 3வது இடத்தில் இருந்த இந்தியா 2024ம் ஆண்டில் 5வது இடத்துக்கு சென்றுள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு மிகப்பெரும் சுகாதார அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதனால் இந்தியர்களின் ஆயுள்காலம் 5.2 ஆண்டுகளாக குறைகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிகவும் மாசடைந்த நகரமாக கலிபோர்னியா உள்ளது. பிற நகரங்களாக லாஸ் ஏஞ்சல்ஸ், ஆன்டாரியோ ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேசமயம் சியாட்டில், வாஷிங்டன் ஆகியவை தூய்மையான நகரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. உலகின் மிகவும் தூய்மையான பகுதியாக பியூர்டோ ரிகோவின் மயாகீஸ் இடம்பிடித்துள்ளது.

The post உலகின் மிகவும் மாசடைந்த தலைநகரம் டெல்லி: ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article