உண்மையான பேரினவாதிகளும் தேசவிரோதிகளும் இந்தி வெறியர்கள்தான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

5 hours ago
ARTICLE AD BOX

தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் தெண்டர்களுக்கு தான் எழுதியுள்ள கடிதத்தை வெளியிட்டுள்ளார்.  

அதில், தமிழ்நாட்டில் தமிழுக்கு உரிய இடத்தைக் கோரிய 'குற்றத்திற்காக' சில தகுதி வாய்ந்த மதவெறியர்கள் எங்களை பேரினவாதிகள் மற்றும் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தும்போது இந்த பிரபலமான மேற்கோள் எனக்கு நினைவுக்கு வருகிறது.

கோட்சேவின் சித்தாந்தத்தை மகிமைப்படுத்தும் மக்கள், சீன ஆக்கிரமிப்பு, வங்காளதேச விடுதலைப் போர் மற்றும் கார்கில் போரின் போது அதிக நிதியை வழங்கிய திமுக மற்றும் அதன் அரசாங்கத்தின் தேசபக்தியைக் கேள்விக்குள்ளாக்கும் துணிச்சலைக் கொண்டுள்ளனர், அதே நேரத்தில் அவர்களின் சித்தாந்த மூதாதையர் 'பாபு' காந்தியைக் கொன்றவர். 

மொழியியல் சமத்துவத்தைக் கோருவது பேரினவாதம் அல்ல. பேரினவாதம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? தமிழர்களால் உச்சரிக்கவோ அல்லது படித்துப் புரிந்துகொள்ளவோ ​​கூட முடியாத மொழியில் 140 கோடி குடிமக்களை நிர்வகிக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்குப் பெயரிடுவது பேரினவாதம்.

தேசத்திற்கு அதிக பங்களிக்கும் அரசை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதி, NEP எனப்படும் விஷத்தை விழுங்க மறுப்பதற்காக அதன் நியாயமான பங்கை மறுப்பது பேரினவாதம். எதையும் திணிப்பது பகைமையை வளர்க்கும். பகைமை ஒற்றுமையை அச்சுறுத்துகிறது. எனவே, உண்மையான பேரினவாதிகளும் தேசவிரோதிகளும் இந்தி வெறியர்கள், தங்கள் உரிமை இயற்கையானது என்று நம்புகிறார்கள். ஆனால் நமது எதிர்ப்பு துரோகம் என்று நம்புகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிங்க: பாஜகவுக்கு ஆதரவாளரா மஹாவிஷ்ணு? ஆனால் அவர் செய்த செயலை பாருங்க!

மேலும், அந்த கடித்தத்தில் கூறியதாவது, "சோவியத் யூனியன் என்ற மாபெரும் ஒன்றியம் பல்வேறு மொழிகளைப் பேசும் தேசிய இனங்களைக் கொண்டிருந்தது. எனினும், பெரும்பான்மை மொழியான ரஷ்ய மொழி ஆதிக்கம் செலுத்தியது. சோவியத் யூனியன் சிதைவடைந்து பிரிந்ததில் மொழி ஆதிக்கமும் ஒரு காரணமாக அமைந்தது.

தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு. அதில் கைவைப்பது ஆபத்து. கட்டாயமாக ஒரு மொழியைத் திணித்தால் அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும். நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மொழித்திணிப்பினால் பிளவுபட்ட தேசங்களின் வரலாறு நம் பக்கத்திலேயே இருக்கிறது.

கிழக்கு வங்காளத்தினர் தங்கள் தாய்மொழியான வங்காளத்தையும் தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். போராட்டங்களை நடத்தினர். 1971-இல் கிழக்கு வங்காள மக்களின் விடுதலைப் போராட்டம் உச்சத்தை எட்டியது. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் ஆதரவுடன் விடுதலைப் போராட்டம் வென்றது.

வங்கதேச விடுதலைக்காக இந்திய இராணுவம் பங்கேற்ற போரின்போது, இந்தியாவிலேயே மிக அதிக நிதியை அளித்த மாநிலம் என்ற பெருமையைப் பெற்றது தலைவர் கலைஞரின் ஆட்சி நடைபெற்ற தமிழ்நாடு.

பிரதமர் நேரு ஆட்சிக்காலத்தில் சீனா படையெடுத்தபோதும், இந்தியா பாகிஸ்தான் போரின்போதும் இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் முன்னோடியாகப் போர் நிதி திரட்டித்தந்த தி.மு.க.வையும் அதன் அரசையும் பார்த்து தேசவிரோதிகள் என்கிறார்கள், தேசத் தந்தையைப் படுகொலை செய்த கோட்சேயின் கொள்கையை ஆதரிப்பவர்கள்.

நம் தாய்மொழி போலவே மற்றவர்களின் தாய்மொழியையும் மதிக்கிறோம். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் நம் சகோதர சகோதரிகள்தான். இந்திய அரசியல் சட்டம் 351-ஆவது பிரிவைச் சுட்டிக்காட்டி, இந்தி மொழியை வளர்க்கும் பொறுப்பை ஒன்றிய அரசு தீவிரமாக மேற்கொள்கிறது. செப்டம்பர் 14-ஆம் நாளை 'இந்தி திவஸ்' என்ற பெயரில் கொண்டாடுகிறது. அந்த நாளில், இந்தித் திணிப்பு முழக்கங்களை ஒன்றிய ஆட்சியாளர்கள் முன்வைக்கிறார்கள்.

'கன்னடத்தைப் புறக்கணித்து, இந்தியைத் திணிப்பவர்களை ஏற்க மாட்டோம்' என்று கூறிக் கர்நாடகாவில் இந்தி எழுத்துகளை அழிப்பது பற்றிய காணொலி சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்கத் தயக்கம் ஏன்?

எங்கள் அண்ணா அன்று மாநிலங்களவையில் கேட்டதைத்தான் அவரது தம்பிகளான நாங்களும் கேட்கிறோம். அவரால் பெயர் சூட்டப்பட்ட எங்கள் தமிழ்நாடு கேட்கிறது. இலட்சியம் நிறைவேறும் வரை கேட்டுக்கொண்டே இருப்போம்" எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிங்க: தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article