உடல் பருமனால் பொருளாதாரப் பேரழிவை சந்திக்கப் போகும் இந்தியா! 

3 hours ago
ARTICLE AD BOX

சமீபத்திய ஆய்வுகள் மூலம் உடல் பருமன் என்பது தனிப்பட்ட உடல்நலப் பிரச்சனை மட்டுமல்ல, இது உலக நாடுகளின் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது என்பது தெரிய வந்துள்ளது. 2060 ஆம் ஆண்டளவில் இதன் பொருளாதாரச் சுமை பல மடங்கு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கடுமையாக பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் மட்டும், உடல் பருமன் தொடர்பான செலவுகள் தற்போது பல பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாக உள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில வருடங்களில் இந்தச் சுமை மூன்று மடங்கு வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உலகளவில் உடல் பருமன் சார்ந்த செலவுகள் பல டிரில்லியன் டாலர்களை தாண்டும் என்றும், இது கொரோனா பெருந்தொற்று காலத்தின் பொருளாதார இழப்பை விட அதிகமாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பெற்றோர்களே! குழந்தைகளின் உடல் பருமன் பிரச்னையை பொறுமையுடன் கையாளுங்கள்!
Obesity

உடல் பருமன் தொழிலாளர் சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடல் பருமன் காரணமாக ஊழியர்கள் அதிக விடுப்பு எடுப்பது, உற்பத்தி திறன் குறைவது போன்ற காரணங்களால் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றன. மேலும் உடல் பருமன் காரணமாக ஊதியம் குறைவது மற்றும் வேலை வாய்ப்புகள் பறிபோவது போன்ற நிலையும் உருவாகிறது. இது தனிநபரின் பொருளாதார நிலையையும் பாதிக்கிறது.

உடல் பருமன் பொருளாதார பேரழிவு ஏற்படுத்தும் பிரச்சனை இந்தியாவுக்கு மட்டும் கிடையாது. உலகளாவிய அளவிலும் இது ஒரு பெரும் பொருளாதார சவாலாக உருவெடுத்துள்ளது. பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இந்த பிரச்சனையால் அதிக பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன. உடல் பருமனை கட்டுப்படுத்த தவறினால், உலக நாடுகள் மிகப்பெரிய பொருளாதார பேரழிவை சந்திக்க நேரிடும். 

இதையும் படியுங்கள்:
உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம் குடல் ஆரோக்கியம்!
Obesity

எனவே, உடல் பருமன் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தனி மனிதனின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்திற்கும் மிகவும் முக்கியமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி, சமச்சீரான உணவு முறையைப் பின்பற்றுவது, உடல் பருமன் பிரச்சனையை கட்டுப்படுத்த உதவும். இதன் மூலம் தனிமனித மற்றும் நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தலாம்.

Read Entire Article