ARTICLE AD BOX
கீவ் : உக்ரைனில் இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர வான்வழி தாக்குதலை ரஷிய படைகள் நடத்தியிருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இது குறித்து உக்ரைன் விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷிய படைகளால் ஏவப்பட்ட 138 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாகவும் 119 டிரோன்கள் ரேடார் கண்காணிப்பிலிருந்து தப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியும் ரஷியா தாக்குதல் நிகழ்த்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.