ARTICLE AD BOX
இயர்ஃபோன், ஹெட்ஃபோன் போன்றவற்றை அதிக நேரம் தொடர்ந்து பயன்படுத்துவது ஆபத்து என்று எத்தனையோ பேர் சொல்லியிருப்பார்கள், அதனை மத்திய சுகாதாரத் துறையே தற்போது எச்சரிக்கையாக வெளியிட்டிருக்கிறது.
காது மற்றும் கேட்புத் திறனில் மீண்டும் சரி செய்யவே முடியாத பிரச்னைகளை இந்த இயர்ஃபோன், ஹெட்ஃபோன்கள் ஏற்படுத்திவிடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை பொது இயக்குநர் அதுல் கோயல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.