ARTICLE AD BOX
இட்லி கடை படத்தின் புதிய ரிலீஸ் தேதி இன்னும் 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் திரைப்படம் தான் இட்லி கடை. இந்த படத்தினை நடிகர் தனுஷ் தானே இயக்கி, நடித்து வருகிறார். இப்படம் தனுஷின் 52 ஆவது படமாகும். இதில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து அருண் விஜய், ராஜ் கிரண், சமுத்திரகனி, பார்த்திபன், சத்யராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க கிரண் கௌசிக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தேனி பகுதியில் தொடங்கப்பட்டு பொள்ளாச்சி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் இந்த படம் 2025 ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடையாத காரணத்தினால் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் தொடர்ந்து பரவி வந்தன.
IDLY KADAI release is postponed due to call sheet reason of other actors and official announcement on new release date is coming in 10 days.
~Producer of idlykadai 🙏🏻#IdlyKadai #dhanush pic.twitter.com/wyKCIKX1F9
— JAGAME DHANUSH 2.0 (@Dfan_Rohin) March 22, 2025
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், “நித்யா மேனன், அருண் விஜய், ராஜ் கிரண் ஆகிய நடிகர்களின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு முழுவதும் நிறைவடையவில்லை. இன்னும் 25 சதவீத படப்பிடிப்புகள் மீதம் உள்ளது. நல்ல படத்தை அவசர அவசரமாக வெளியிட வேண்டாம் என நினைக்கிறோம். எனவே விரைவில் இன்னும் 10 நாட்களுக்குள் இட்லி கடை படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.