ARTICLE AD BOX
இதுதான் கர்மா.. பலுசிஸ்தான் ரயில் கடத்தல் பற்றி பாகிஸ்தான் என்ன சொல்கிறது பாருங்க!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான், தன் எல்லைப் பகுதிகளில் இந்தியா பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக, சமீபத்தில் நடந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் ஷஃபாகத் அலி கான், பாகிஸ்தானில் நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள சில குழுக்களுக்கும் இதில் பங்கு இருப்பதாக அவர் தெரிவித்தார். ஜாஃபர் எக்ஸ்பிரஸ் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் தலைவர்களுடன் பேசிக்கொண்டு இருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா உடனடியாக பதில் அளித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், பாகிஸ்தானின் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்தியா முழுமையாக நிராகரிக்கிறது என்று தெரிவித்தார். மேலும், உலக பயங்கரவாதத்தின் புகலிடம் எங்கே உள்ளது என்று எல்லாருக்கும் தெரியும். பாகிஸ்தான் மற்றவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு, தங்கள் நாட்டு பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தான் கூறியுள்ள ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தாக்குதலில் 21 பயணிகள் மற்றும் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த ரயில் பலுசிஸ்தானின் குவெட்டாவில் இருந்து பெஷாவருக்கு சென்று கொண்டிருந்தது. இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சமீப காலமாக இந்த அமைப்பு பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.
பாகிஸ்தானில் என்ன பேசுகிறார்கள்?
இந்த ரயில் தாக்குதல் குறித்து பாகிஸ்தானில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர், பலுசிஸ்தானில் நீண்ட காலமாக அமைதியின்மை நிலவுவதாகவும், இதற்கு வெளிநாட்டு சக்திகளின் உதவி இருப்பதாகவும் கூறுகின்றனர். குறிப்பாக, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் குழுக்களுக்கு உதவி செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர்.
முன்னாள் பாகிஸ்தான் தூதர் ஒருவர் கூறுகையில், இந்தியா பலுசிஸ்தானையும் காஷ்மீரையும் ஒப்பிட்டு பேசுவது தவறு. பலுசிஸ்தான் பாகிஸ்தானின் ஒரு பகுதி என்றும் அவர் கூறினார்.

மற்றொரு பாகிஸ்தான் பத்திரிகையாளர் கூறுகையில், இந்தியா, மும்பை தாக்குதலை இன்னும் மறக்கவில்லை. அதனால் அவர்கள் பழிவாங்க நினைக்கிறார்கள். பாகிஸ்தானும் இனிமேல் பதிலடி கொடுக்க தயாராக வேண்டும். ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.
முன்பெல்லாம், இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறும்போது பாகிஸ்தானை நாம் குற்றம்சாட்டுவோம். அதற்கான ஆதாரங்களையும் கொடுப்போம். ஆனால் பாகிஸ்தான், ஹாயாக எந்த நடவடிக்கையும் எடுக்காது. இப்போதெல்லாம் பாகிஸ்தான் கதறுகிறது. இந்தியாவிற்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமலும் குற்றம்சாட்டுகிறது. இதுதான், கர்மா என்று சொல்வார்கள், தீவிரவாதத்தை வளர்த்த நாடு, தீவிரவாதத்தால்தான் வீழும் என்கிறார்கள் நமது நெட்டிசன்கள்.
ஆக மொத்தம், பாகிஸ்தான் இந்தியா மீது குற்றம் சுமத்துவதும், இந்தியா அதை மறுப்பதும் எல்லைப் பகுதியில் பதற்றத்தை அதிகரித்து வருகிறது. இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே மேலும் பிரச்சினைகளை உருவாக்கலாம் என்று கருதப்படுகிறது.
- கைகோர்க்கும் ஆப்கானிஸ்தான்.. சீனுக்குள் வரும் சீனா.. அப்பவே சொன்ன மோடி! பலுசிஸ்தானில் நடப்பது என்ன?
- இரவோடு இரவாக இறங்கிய ராணுவம்! பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரயில் மீட்பு! கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது?
- பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. வெளியான ஷாக் வீடியோ!
- 50 பிணைக் கைதிகள், 50 பாகிஸ்தான் ராணுவத்தினரை கொன்று விட்டோம்- பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு
- பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 30 ராணுவத்தினரை சுட்டுக் கொன்ற ஆயுதக் குழுவினர்.. 13 தீவிரவாதிகள் கொலை!
- வடிவேலு கூட இனி நடிக்கவே மாட்டேன்! பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை.. அந்த படத்திற்கு பிறகு! சோனா பதில்
- பீச்சில் வாக்கிங் போனவருக்கு அடித்த ஜாக்பாட்.. 90 வருட பழமையான விஸ்கி கண்டுபிடிப்பு!
- ஆடிய ஆட்டம் என்ன.. ரூ.12 லட்சம் கோடி போச்சு.. பஸ்பமான எலான் மஸ்க்கின் சொத்துக்கள்.. காரணம் டிரம்ப்
- அடுத்தவங்களுக்கு வழி விடணும்! இறங்கி அடிச்சு வரீங்க! பிரியங்காவிடம் நேரடியாக சொன்ன டிடி! செம சம்பவம்
- சிறகடிக்க ஆசை: சந்தேகப்படும் ஸ்ருதி.. ரகசியத்தை உளறிய விஜயா! மீனாவுக்கு தெரிய வந்த உண்மை
- "முடிந்ததை செய்யுங்க".. அணு ஆயுதத்தால் வெடிக்கும் மோதல்.. அமெரிக்காவை மதிக்காத ஈரான் - பதில்
- Asthma home remedy: வெற்றிலை+ ஒரு துண்டு இஞ்சி போதும்! 48 நாளில் கரைந்தோடும் சளி! ஆஸ்துமாவுக்கு பைபை
- திருச்செல்வம் என்கிட்ட நேரடியா அப்படி கேட்டாரு! இதை எதிர்பார்க்கல! சிறகடிக்க ஆசை மீனா மகிழ்ச்சி
- இட்லிக்கு அரைக்கும்போது இதையும் கலந்து போடுங்க.. தோசை மாவு கரைக்கும்போது ஆப்ப சோடா யூஸ் பண்றீங்களா?
- அசுர வளர்ச்சி.. சென்னையில் இந்த ஏரியாவை விடாதீங்க.. முதலீடு பண்ணுங்க.. கோடீஸ்வரர் ஆகலாம்!