‘இசைமூச்சான இளையராஜா’ - வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

20 hours ago
ARTICLE AD BOX

லண்டனில் வரும் 8ஆம் தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ள இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது!

ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.

அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார்.

உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்!” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Read Entire Article