அரசுப் பள்ளிகளில் இதுவரை 1.28 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு

1 day ago
ARTICLE AD BOX

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 58 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 1 கோடியே 20 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குதல், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதால் தற்போது அதிக அளவு பெற்றோர் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டில் மார்ச் மாதம் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவியர் சேர்ந்தனர். இந்த ஆண்டு மார்ச்1ம் தேதி தொடங்கிய சேர்க்கையில் 17ம் தேதி வரையில் 1.28 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

The post அரசுப் பள்ளிகளில் இதுவரை 1.28 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article